நாடுமுழுவதும் செப்டம்பர் 12ஆம் தேதி நீட் நுழைவுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில் இன்று மாலை 5 மணி முதல் அதற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு வேண்டாம் என தமிழக அரசு உறுதியாக சொல்லி வரும் நிலையில், அதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 12ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே 155 நகரங்களில் தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில் , கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தமுறை 198 நகரங்களில் நீட்தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கான விண்ணப்பங்களை இன்று மாலை 5 மணிமுதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
மத்திய அரசு மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கான நீட் நுழைவுத் தேர்வை அமல்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இதற்கு எதிரான அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வந்தாலும்கூட வரும் நீட் தேர்விற்கு தயாராகும்படி மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
இந்நிலையில் நீட் தேர்வு வேண்டாம் என்பதே தமிழக அரசின் தெளிவான கொள்கை என தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு பெறும்வரை மாணவர்களுக்கு பயிற்சி தொடர்ந்து அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
நீட் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ள நிலையில் தமிழக அரசின் தெளிவான முடிவு பின்னர் அறிவிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி