அரசுப் பள்ளிகளில்‌ தொழிற்கல்விப்‌ பாடம் சீரமைப்பு: பாரம்பரிய, தற்காப்புக்‌ கலைகள்‌ அறிமுகம் - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 27, 2021

அரசுப் பள்ளிகளில்‌ தொழிற்கல்விப்‌ பாடம் சீரமைப்பு: பாரம்பரிய, தற்காப்புக்‌ கலைகள்‌ அறிமுகம் - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு.

 

அரசுப் பள்ளிகளில்‌ தொழிற்கல்விப்‌ பாடத்திட்டம் சீரமைக்கப்படும் என்றும் பாரம்பரிய, தற்காப்புக்‌ கலைகள்‌ அறிமுகம் செய்யப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று (ஆக.26) உயர் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை  மீதான விவாதம் நடைபெற்றது.


இதில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் வெளியான அறிவிப்பு:

''தொழிற்கல்விப்‌ பாடத்திட்டத்தைச்‌ சீரமைத்தல்‌

தொழிற்கல்வி பயிலும்‌ மாணவர்களின்‌ வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும்‌ வகையில்‌ அரசு மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ தொழிற்கல்விப்‌ பாடங்கள்‌ தமிழ்நாடு திறன்‌ மேம்பாட்டுக்‌ கழகத்தின்‌ உறுதுணையோடு மேம்படுத்தப்படும்‌.

இதனால்‌ மாணவர்கள்‌ தொழிற்சாலைகளின்‌ தேவைகளுக்கேற்ப திறனைப் பெற்று உடனடி வேலைவாய்ப்பினைப்‌ பெறுவர்‌.

பள்ளிகளில்‌ பாரம்பரியக்‌ கலைகள்‌

கரகாட்டம், கும்மி, சிலம்பாட்டம்‌, ஒயிலாட்டம்‌, காவடியாட்டம்‌, பன்னிசை, நாட்டுப்புறப்‌ பாட்டு போன்ற தமிழரின்‌ பாரம்பரியக்‌ கலை வடிவங்களை அரசுப்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவர்களிடம்‌ எடுத்துச்‌ செல்வதை‌ இலக்காகக்‌ கொண்டு கிராமப்புறங்களில்‌ ஆலோசனை மையம்‌ உருவாக்கப்படும்‌. நாட்டுப்புறக்‌ கலைஞர்களின்‌ உதவியுடன்‌ பயிற்சியளிக்கப்படும்‌.

இதுபோலவே சிலம்பம்‌, மல்யுத்தம்‌ முதலான தமிழரின்‌ பாரம்பரிய தற்காப்புக்‌ கலைகளையும்‌ அரசுப்‌ பள்ளிகளில்‌ மாணவர்களுக்கு முறையாகக்‌ சேர்க்க உரிய பயிற்சி அளிக்கப்படும்‌''.

இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

3 comments:

  1. ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நிலுவையில் உள்ள
    தமிழ் வழி யில்Special teacher (இட ஒது க் கீ டு )தேர்வான எங்களுக்கு பணி வணங்குதல் வேண்டி கோரிக்கை

    ReplyDelete
  2. வேளாண் தொழில் கல்வி என்னாச்சு?

    ReplyDelete
  3. ஸ்பெஷல் டீச்சர் தேர்வான எங்களுக்கு வேலை வாய்ப்பு போடுங்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி