தமிழகத்தில் செப்.17ம் தேதி மீண்டும் மாபெரும் தடுப்பூசி முகாம் – அமைச்சர் அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 14, 2021

தமிழகத்தில் செப்.17ம் தேதி மீண்டும் மாபெரும் தடுப்பூசி முகாம் – அமைச்சர் அறிவிப்பு!

 

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதியன்று நடத்தப்பட்ட மாபெரும் தடுப்பூசி முகாம்களை போல வரும் 17 ஆம் தேதியும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல் அளித்துள்ளார்.


தடுப்பூசி முகாம்


நாடு முழுவதும் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாநிலங்களும் ஒரு குறிப்பிட்ட அளவு இலக்கு வைத்து ஒவ்வொரு நாளும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் கடந்த 12 ஆம் தேதியன்று மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது.


இந்த தடுப்பூசி முகாம்கள் தமிழகம் முழுவதும் சுமார் 40,000 இடங்களில் அமைக்கப்பட்டு நடத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டுமாக வரும் 17 ஆம் தேதியன்று மெகா தடுப்பூசி முகாம்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ‘தமிழகத்தில் வரும் 17 ஆம் தேதியன்று மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட இருக்கிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி