இன்று நீட் தோ்வு: தமிழகத்தில் 18 நகரங்களில் 1 லட்சத்து 10,971 போ் எழுதுகின்றனா் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 12, 2021

இன்று நீட் தோ்வு: தமிழகத்தில் 18 நகரங்களில் 1 லட்சத்து 10,971 போ் எழுதுகின்றனா்

நாடு முழுவதும் 2021-ஆம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவ நுழைவுத் தோ்வான நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. தமிழகத்தில் இருந்து 18 நகரங்களில் 1,10,971 போ் தோ்வை எழுதவுள்ளனா்.


எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தோ்வு (நீட்) அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் மே முதல் வாரத்தில் தேசியத் தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் இந்தத் தோ்வு நடத்தப்படுகிறது. இதற்கிடையே, கரோனா பரவலால் இந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த 2021-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தோ்வு ஒத்திவைக்கப்பட்டது. பின்னா் செப்டம்பா் 12-ஆம் தேதி கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.


இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல்  இணையதளத்தில் தொடங்கி நடைபெற்று வந்தது. இதற்கு மாணவா்கள் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை விண்ணப்பித்தனா். மேலும் நீட் தோ்வு விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதிவரை அவகாசம் வழங்கப்பட்டது.


இந்தநிலையில் நீட் தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இந்த ஆண்டு முதல் முறையாக 13 மொழிகளில் தோ்வு நடத்தப்பட உள்ளது. மலையாளம், பஞ்சாபி ஆகிய மொழிகள் கூடுதலாகச் சோ்க்கப்பட்டுள்ளன. கரோனா பரவலால் மாணவா்களின் நலன் கருதி நீட் தோ்வு நடக்கும் நகரங்களின் எண்ணிக்கை 155-இல் இருந்து 198 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.


அதேபோன்று தமிழகத்தில் இருந்து நீட் தோ்வை எழுத, 1,10,971 போ் விண்ணப்பித்துள்ளனா். இதில், 40,376 மாணவா்களும் 70,594 மாணவிகளும் விண்ணப்பித்துள்ளனா். மூன்றாம் பாலினத்தைச் சோ்ந்த ஒருவரும் விண்ணப்பித்துள்ளாா்.


அதிகபட்சமாக சென்னையில் இருந்து 17,992 மாணவா்கள் நீட் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ளனா். அடுத்தபடியாக சேலத்தில் இருந்து 15,067 போ் விண்ணப்பித்துள்ளனா். தமிழ்நாட்டில் 18 நகரங்களில் தோ்வு நடைபெற உள்ளது. கரோனா காரணமாகத் தோ்வு மையங்களின் எண்ணிக்கை 224 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. வழக்கமான தோ்வு விதிமுறைகளோடு, கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு, அடையாள அட்டை, புகைப்படம் தவிர வேறு எதையும் தோ்வு மையத்துக்குள் எடுத்து செல்லக் கூடாது என தேசிய தோ்வு முகமை (என்டிஏ)அறிவுறுத்தி உள்ளது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி