தமிழகத்தில் தற்போது 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான அசல் தமிழகத்தில் தற்போது 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. நாளை நாமக்கல் மாவட்டத்தில் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. நாளை நாமக்கல் மாவட்டத்தில் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவலினால் கடந்த ஆண்டு பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. மேலும் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு தேர்வில்லா தேர்ச்சி அளிக்கப்பட்டது. முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் தான் மதிப்பெண்களும் வழங்கப்பட்டு அடுத்த கல்வி ஆண்டிற்கு அனுப்பப்பட்டனர். வைரஸின் தாக்கம் சற்று தனிந்த பின் மீண்டும் இந்த வருட துவக்கத்தில் ஜனவரி மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டது.
4 மாத காலங்களில் பாடங்கள் நடத்தப்பட்டதன் அடிப்படையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும் என கல்வித்துறை அறிவித்து இருந்தது. ஆனால் அதற்குள் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவியதால் தேர்வுகள் இந்த ஆண்டும் ரத்து செய்யப்பட்டது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் மாணவர்களுக்கு முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சி அளிக்கப்பட்டது. தொற்றின் தாக்கம் குறைந்ததினால் மாணவர்களுக்கு தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் 11ம் வகுப்பில் சேர்ந்து பயின்று வருகின்றனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி