அரசு பள்ளி 2 ஆசிரியர்கள் உட்பட 5 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 7, 2021

அரசு பள்ளி 2 ஆசிரியர்கள் உட்பட 5 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை!!

காஷ்மீரில் 48 மணி நேரத்தில் 2 ஆசிரியர்கள் உட்பட 5 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்று இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீநகர் மாவட்டத்தில் உள்ள இட்ஹா சங்கம் என்ற பகுதியில் இன்று காலை 1 பெண் உள்ளிட்ட 2 ஆசிரியர்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். அவர்கள் இருவரும் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆவர். கொல்லப்பட்ட பெண் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர் ஆசிரியை என்று ராணுவம் தெரிவித்துள்ளது. ஆசிரியர்கள் இருவர் கொல்லப்பட்டதை அடுத்து அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி இருப்பதாக பாதுகாப்புப் படையினர் கூறியுள்ளனர்.


48 மணி நேரத்தில் காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 5 அப்பாவி மக்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.கடந்த செவ்வாய் கிழமை அன்று ஸ்ரீநகர் இஃபால் பூங்கா அருகே மருந்தகம் ஒன்றில் நுழைந்த தீவிரவாதிகள் அதன் உரிமையாளரான 70 வயது மக்கன் லால்வை சுட்டுக் கொன்றனர்.அதே நாளில் பேல்பூரி வியாபாரி வீரேந்திர பஸ்வான், டாக்ஸி ஓட்டுநரும் டாக்ஸி ஸ்டேண்ட் சங்கத் தலைவருமான லோன் ஆகிய 2 பேரையும் தீவிரவாதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொன்றனர்.தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளதை அடுத்து பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடிகளை அமைத்து பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி