தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரி, காரைக்காலிலும் சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 14, 2021

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரி, காரைக்காலிலும் சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை

 தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரி, காரைக்காலில் ஆயுதபூஜை, விஜயதசமி விடுமுறைகளைத் தொடர்ந்து வரும் சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை  விடப்படுவதாகப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

கரோனா பெருந்தொற்று காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டு, இயங்கி வருகின்றன.


வழக்கமாக ஜூன் மாதத்தில் தொடங்கப்படும் கல்வியாண்டு, கோவிட் 2-வது அலை காரணமாக சுமார் 3 மாதங்களுக்குப் பிறகு தொடங்கியது.

இந்த இழப்பை ஈடு செய்யும் வகையில், வாரத்தில் 6 நாட்கள் திங்கட்கிழமையில் இருந்து சனிக்கிழமை வரை இயங்கி வருகின்றன.

இதற்கிடையே வியாழன், வெள்ளியன்று வரும் ஆயுதபூஜை, விஜயதசமி விடுமுறைகளைத் தொடர்ந்து தொடர் விடுப்பு எடுக்க ஏதுவாக சனிக்கிழமை (16.10.2021) பள்ளிகளுக்கு தமிழகத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து புதுச்சேரி கல்வித்துறை துணை இயக்குநர் சிவகாமி வெளியிட்ட உத்தரவில், "வரும் 15, 16ம் தேதிகள் புதுச்சேரி, காரைக்காலில் அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி