படித்த மற்றும் வேலையில்லாத இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. இது குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
உதவித்தொகை:
தமிழக அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது.இதை தொடர்ந்து படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை பெறுவதற்கு சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். அதுமட்டுமல்லாது அதனை தொடர்ந்து புதுப்பித்திருப்பதும் அவசியமாகும். வயது வரம்பு மற்றும் குடும்ப ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
திராவிடா் மற்றும் பழங்குடியினா் 40 வயதிற்கு மிகாமலும், மற்றவர்கள் 40 வயதிற்கு மிகாமலும் இருப்பது அவசியமாகும். மேலும் விண்ணப்பித்தவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். முறையாக 9ம் வகுப்பு முடித்து 10 ம் வகுப்பில் தோல்வி அடைந்த இளைஞர்களுக்கு மாதம் 200 மற்றும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 300 ரூபாய், மேல்நிலை கல்வியை முடித்தவர்களுக்கு 400 ரூபாய் மற்றும் பட்டதாரிகளுக்கு 600 ரூபாய் வழங்கப்படுகிறது.
தினசரி கல்வி நிறுவனங்களுக்கு சென்று பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது. எனினும், தொலைதூரக்கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவர்கள் உதவித்தொகை பெறலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் சிவகங்கையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு நல அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி