ஆசிரியர்களுக்கு ஜீரோ கவுன்சிலிங் அமல்படுத்தினால் மாநிலந் தழுவிய போராட்டம் - ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 17, 2021

ஆசிரியர்களுக்கு ஜீரோ கவுன்சிலிங் அமல்படுத்தினால் மாநிலந் தழுவிய போராட்டம் - ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு!

 

 ஒரே பள்ளியில் 10,20 ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஜீரோ கவுன்சிலிங் ( பூஜ்ய கலந்தாய்வு ) இடமாறுதல் ஆகிய அறிவிப்புகளை பள்ளிக்கல்வித்துறை கைவிட வேண்டும்!

அமல்படுத்தினால் மாநிலந் தழுவிய போராட்டம்!

 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு!




65 comments:

  1. மிக‌வும் த‌வ‌றான‌ முடிவு....போராட‌ வேண்டிய‌ விட‌ய‌ம‌ல்ல‌...போற்ற‌ வேண்டிய‌ விடய‌ம்...
    ஏனெனில்,

    1.ம‌ற்ற‌ துறைக‌ளிலெல்லாம் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ப‌ணிமாறுத‌ல் ந‌ட‌க்கும் போது 10,20 ஆண்டுக‌ளில் ப‌ணியாற்றுப‌வ‌ர்க‌ளைக் கூட‌ வேறு இட‌ங்க‌ளுக்கு அவ‌ர்க‌ளின் விருப்ப‌ அடிப்ப‌டையில் தேர்ந்தெடுத்த‌ இட‌ங்க‌ளுக்கு ப‌ணிமாறுத‌ல் செய்வ‌து எந்த‌ வ‌கையில் த‌வ‌று?..
    2.ப‌ல‌ ஆண்டுக‌ள் ஒரே ப‌ள்ளியில் ப‌ணிபுரியும் ஆசிரிய‌ர்க‌ளில் ப‌ல‌ர் உள்ளூர் பிர‌முக‌ர்க‌ள்,அர‌சிய‌ல்வாதிக‌ள்,
    ச‌ங்கப் பிர‌திநிதிக‌ள் போன்றோர்க‌ளை ஜால்ரா அடித்துக் கொண்டும்,கையில் போட்டுக் கொண்டும் பல்வேறு குழ‌ப்ப‌ங்க‌ளையும்,
    சிக்க‌ல்க‌ளையும்,த‌டைக‌ளையும் உண்டாக்குகின்ற‌ன‌ர்...
    அவ‌ற்றைக் க‌ளைய‌ இதுவே சிற‌ந்த‌ முறை..
    3.நிர்வாக‌ மாறுத‌ல் என்ற‌ பெய‌ரில் ப‌ல‌ இல‌ட்ச‌ங்க‌ளைக் கொடுத்து ப‌ணிமாறுத‌ல் பெறும் நிலை ஜீரோ க‌ல‌ந்தாய்வு ந‌டைமுறைக்கு வ‌ந்தால் அற‌வே ந‌ட‌க்காது அல்ல‌து குறையும்...
    4.இத்த‌கைய‌ க‌ல‌ந்தாய்வுக‌ளால் ப‌ல‌ கிலோ மீட்ட‌ர்க‌ள் ப‌ய‌ண‌ம் செய்து ப‌ணியாற்றும் பெண் ஆசிரிய‌ர்க‌ளின் வேத‌னை சிறிதேனும் நிச்ச‌ய‌ம் குறையும்..
    5.புதிய‌ இட‌ங்க‌ளுக்கு செல்லும் போது ப‌ல‌ ஆண்டுக‌ள் ப‌ணிபுரிந்த‌ ஆசிரிய‌ராக‌ இருந்தாலும்,மாண‌வ‌ர்க‌ளைக் க‌வ‌ர‌,புதிதாக‌ ப‌ணியில் சேர்ந்த‌ ஆசிரிய‌ர் போல‌ செய‌ல்ப‌டுவார்..என‌வே மாண‌வ‌ர்க‌ளின் க‌ல்வித் திற‌னும்,த‌ர‌மும் ப‌ன்ம‌ட‌ங்கு பெருகும்..
    6.ப‌ள்ளிக‌ளில் கோஷ்டிப் பூச‌ல் இருக்க‌வே இருக்காது அல்ல‌து குறையும்..

    என‌வே இந்த‌ விஷ‌ய‌த்தில் சுய‌நல‌ம் பார்க்காது பொதுந‌ல‌த்தோடு செய‌ல்ப‌டுங்க‌ள்..


    இத‌னால்
    என‌க்கும் சிறு சிறு பாதிப்புக‌ள் இருந்தாலும் பொது ந‌ல‌த்தோடு இத்திட்ட‌த்தை வ‌ர‌வேற்கின்றேன்..

    பின் குறிப்பு..
    நானும் ஒரு அர‌சுப் ப‌ள்ளி ஆசிரிய‌ர் தான்..

    ReplyDelete
    Replies
    1. நடைமுறைப்படுத்துங்கள்,அனைவருக்கும் பயனுள்ள வகையில் இருந்தால்...நன்றி.

      Delete
    2. சரியான கருத்து நண்பரே

      Delete
    3. உண்மையை உரக்க சொன்னதற்கு நன்றி 🙏🙏

      Delete
    4. மிகச் சரியாக சொன்னீர்கள் பல ஆசிரியர்கள் பள்ளியை பட்டா போட்டு நாசம் செய்து விடுகிறார்கள் தமிழக அரசின் வரவேற்க வேண்டிய அருமையான அவசியமான திட்டம்

      Delete
    5. ஆமா இவனுக பத்து பதினைந்து வருடமாக ஓரே பள்ளி ஒரே நாற்காலி உக்காந்துட்டு இருப்பானுக நாம சொந்த ஊருக்கு கூட திரும்ப முடியாம சாகனும் இதுக்கு எதுக்கு சங்கம்...போராட்டம்... இவனுகள செருப்பால் அடித்தாலும் தகும்

      Delete
  2. நீங்கள் ம‌ட்டும் தான் போராட‌ வேண்டும்..பெரும்ப‌ன்மையான‌ ஆசிரிய‌ர்க‌ள் ஜீரோ க‌ல‌ந்தாய்வை ம‌ன‌தார‌ வ‌ர‌வேற்கின்றோம்..

    ReplyDelete
  3. போராட்டம் பன்ன யாரும் வர மாட்டாங்க

    ReplyDelete
  4. கடந்த 3-ஆண்டுகளாக முறையான கலந்தாய்வு நடைபெறாத காரணத்தால் அணைவருக்கும் பூஜ்ஜிய கலந்தாய்வு நடத்துவது ஒன்றே சிறந்த நீதியாகும்
    போராட்டத்தினால் பயனில்லை

    ReplyDelete
    Replies
    1. ஆம சரியான முடிவு நிச்சயமாக பூஜ்ஜிய கலந்தாய்வு நடைபெறவேண்டும் கூட்டணி நம்பி கடந்த ஆட்சியில் போராட்டத்தில் பல ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர்

      Delete
  5. எதற்கு எடுத்தாலும் போராட்டம் தானா.... ஒரே பள்ளியில் 20 பணியாற்றியது போதாதா....

    ReplyDelete
  6. சைடு பிசினஸ் யாரு பார்ப்பா?????

    ReplyDelete
  7. முழுக்க‌ ,முழுக்க‌ சுய‌ந‌ல‌ன் சார்ந்த‌ உங்க‌ளின் போராட்ட‌ முடிவை வ‌ன்மையாக‌ க‌ண்டிக்கின்றேன்..

    ReplyDelete
  8. ஆசிரிய‌ர்க‌ளின் மாண்பையும்,ந‌ன்ம‌திப்பினையும் சிதைக்கும் உங்க‌ளின் போராட்ட‌ முடிவு க‌ண்டிக்க‌த்த‌க்க‌து..

    ReplyDelete
  9. வேண்டும் வேண்டும் Zero counseling வேண்டும்

    ReplyDelete
  10. 10 ஆண்டுக‌ளுக்கு மேலாக‌ ஒரே ப‌ள்ளியில் ப‌ணிபுரிவோர் க‌ட்டாய‌ம் ப‌ணி இட‌மாற்ற‌ம் செய்ய‌ப்ப‌ட‌ வேண்டும்..அதுவே அற‌ம்...
    அவர்க‌ள் எவ்வித‌ புகாருக்கும் உள்ளாகாத‌,மாண‌வ‌ர்க‌ளுக்கு மிக‌வும் பிடித்த‌,ந‌ன்றாக‌ க‌ற்பிக்கும்,ந‌ல்லாசிரிய‌ராக‌வே இருந்தாலும் கூட‌ அப்பொழுது தான் அவ‌ரின் சேவை ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கும் கிடைக்கும்..

    ReplyDelete
    Replies
    1. மிகவும் வரவேற்க்கத்தக்கது

      Delete
  11. ஜீரோ க‌ல‌ந்தாய்வு,8 அல்ல‌து 10 ஆண்டுக‌ளுக்கு மேல் பணியாற்றும் ஆசிரிய‌ர்க‌ளை இட‌மாற்ற‌ம் செய்யும் அர‌சின் முடிவால்...
    ஆசிரிய‌ர் ம‌த்தியில் அதிர்ச்சி அல்ல‌..
    ம‌கிழ்ச்சி தான்..
    ப‌த‌ற்ற‌ம் அல்ல‌...ப‌ர‌வ‌ச‌ம் தான்...
    அச்ச‌ம‌ல்ல‌..ஆன‌ந்த‌ம் தான்...

    ReplyDelete
    Replies
    1. 10 - 20km உள்ள exchange பண்ணி விட்டாலே போதும்...
      10 20 வருஷமா
      அவர் ஒரே ஊர்ல தான் சேவை ஆற்றுவாரோ....
      கிளப்பி விடுங்க

      Delete
    2. வேண்டும் Zero கவுன்சிலிங்

      Delete
  12. என்னா ம‌யிலு மொற‌ச்சிகினே...

    ReplyDelete
    Replies
    1. அது அப்படித்தான்....
      இந்த சங்க நோட்டீஸ் எல்லாம் டவுன்லோட் பண்ணி facebookல போடணும் அப்பதான் எல்லாருக்கும் போய் சேரும்...
      மக்களுக்கு சென்று சேரும் உண்மை நிலவரம் 😄😄😄

      Delete
  13. Age neeka yarum kural kodakkamattri gala pg ku

    ReplyDelete
  14. Intha zero councilling varaverkathakkathu ullur teachers politics senior politics ellame kuraium ithu en karuthu nan oru arasu palli asiriyar

    ReplyDelete
  15. Zero கவுன்சலிங் வேண்டும்

    ReplyDelete
  16. ஸ்டாலின் ஆட்சி பொற்கால ஆட்சி ஏன் எதிர்கிறிர்கள் வெளி மாநிலத்திலா பனி ஒன்றியத்தில் தானே பல துறைகளில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறுதல் ஏன் நீங்கள் மட்டும் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் வேறு இடங்களில் ஆடு மாடுகளுக்கா பாடம் நடத்த சொல்கிறார்கள் அரசுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்

    ReplyDelete
  17. தமிழ் வேந்தன் super Sir..

    ReplyDelete
  18. Zero counselling வேண்டும்.

    ReplyDelete
  19. First association a கலைங்க

    ReplyDelete
  20. கண்டிப்பாக Zero counselling வேண்டும்

    ReplyDelete
  21. பல வருடங்களாக எத்தனையோ ஆசிரியர்கள் வெளி மாவட்டங்களில் பணிபுரிந்துகொண்டிருக்கிறார்கள்....முதலில் அவர்களை சொந்த மாவட்டம் அல்லது 100 கி.மீட்டருக்குள் பணி மாறுதல் செய்ய நடவடிக்கை எடுங்கள்..

    ReplyDelete
  22. *பூஜ்யக் கலந்தாய்வை நடத்தக்கூடாது என்று கோரிக்கை வைக்கும் பல ஆசிரியர் சங்கத்தினருக்கு..* ... பல ஆண்டுகளாக வெளிமாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்களின் சில கேள்விகள் ????????

    1. நிர்வாக மாறுதல் என்ற பெயரில் 5 முதல் 7 இலட்சம் வரை பெற்று இடமாற்றம் செய்யும் போது போராடாத நீங்கள்... இப்போது எதிர்ப்பது ஏன்??

    2. பல லட்சங்கள் லஞ்சமாக கொடுத்து விரும்பிய இடங்கள் செல்லும் வசதி படைத்த ஆசிரியர்கள் மத்தியில் நேர்மையான முறையில் மாறுதல் பெற நினைக்கும் ஆசிரியர்களின் கஷ்டங்கள் உங்களுக்கு ஏன் புரியவில்லை?

    3. பல ஆண்டுகளாக தன் குடும்பங்களையும் .. சொந்த பந்தங்களின் நல்லது/ கெட்டது மற்றும் திருவிழா போன்ற எந்த நிகழ்விலும் கலந்து கொள்ள முடியாமல் வெளிமாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்களின் குமுறல்கள் தங்களின் செவிகளுக்கு கேட்கவில்லையா????

    4. 10 மற்றும் 20 ஆண்டுகள் சொந்த ஊரில் பணியாற்றும் உங்களுக்கு அருகில் உள்ள பள்ளிக்கே மாற்ற எதிர்ப்பு தெரிவிக்கின்றீர்கள் ஆனால் நாங்கள் பல ஆண்டுகளாக வெளிமாவட்டங்களில் பணியாற்றுகிறோம்... உங்களுக்கு ஒரு நியாயம் ? எங்களுக்கு ஒரு நியாயமா??

    5. பூஜ்ய கலந்தாய்வை எதிர்க்கும் சங்கங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.??? தயவு செய்து பல ஆண்டுகளாக வெளிமாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்களிடம் உறுப்பினர் சந்தா என்ற பெயரில் பணம் வசூலிக்க வேண்டாம்....

    *இப்படிக்கு*

    பல ஆண்டுகளாக வெளிமாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்

    ReplyDelete
    Replies
    1. first point Correct, but எங்க Vaccant இருக்கோ அங்க மட்டும் Counsling (அ) Senority நடந்தாலே போதுமானது. பொதுவா Join பண்ணும்போது வேறdistrict|a| Join பண்ணுணதற்கப்புறம்தான் அவங்க விரும்புற district கிடைச்சுதான வர்றாங்க...

      Delete
    2. அருமையான கருத்து

      Delete
  23. வெளி ஊர்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இது சாதகம்,,,,,உள்ளுரில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு இது பாதகம்,,,,,ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் கொடுத்து வைத்தவர்கள்,,,,ஓய்வு ஊதியம்,,ஊக்க ஊதியம்,,பணி தளர்வு,,அகவிலைப்படி,,ஈட்டிய விடுப்பு எல்லாம் சாதகமாக இருந்தது,,,,,,,தற்போது எல்லாம் கஷ்டம்,,,,,

    ReplyDelete
  24. தீக்குளிப்பு போராட்டமா நடக்கும் 🤔
    ஒரு வேளை ஊதிய மறுப்பு போராட்டம்னா கூட ok தான்...😄😄😄
    எதிர்பாக்கற அளவுக்கு ஒன்னும் இல்ல

    ReplyDelete
  25. ஐயோ ஐயோ...
    போங்க தம்பி போய் வேலைய பாருங்க 😄😄😄

    ReplyDelete
  26. வரவேற்க வேண்டியது.பல வருடம் வெளி மாவட்டத்தில் பணிபுரியும் நாங்க அங்கேயே இருக்கவா?....loo..........

    ReplyDelete
  27. ஆசிரியர் சமுதாயம் தற்போது மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகிறது. மற்ற துறைகளுக்கும் ஆசிரியர்கள் சமுதாயத்திற்கும் மிகப்பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது. ஆசிரியர்கள்தான் நாம் இந்த நிலையில் உள்ளோம் . நமக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர்களை சிறிது நினைத்து பாருங்கள் . ஆசிரியர்கள் மூலமாக தான் நாம் எல்லோரும்அனைத்து துறையிலும் பணியாற்றி வருகிறோம் என்பதை மறந்து விடக்கூடாது. ஆசிரியர்கள் நமக்கு கற்றுக் கொடுத்த குரு என்பதை மறந்து விடாதீர்கள். மற்ற துறைகளை ஆசிரியர் சமுதாயத்துடன் ஒப்பிடுவது மிகவும் தவறானது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்

    ReplyDelete
  28. பல வருடங்களாக வெளி மாவட்டத்தில் வேலை பார்க்கும் நாங்கள் எப்போது எங்கள் சொந்த மாவட்டத்திற்கு செல்வது? We need zero counselling.

    ReplyDelete
  29. ஆசிரியர்கள் தவிர்த்து பிற துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் இடமாறுதல் பெற்றால் பண பலன் வழங்கப்படும். ஆனால் ஆசியர்களுக்கு மட்டுமே விருப்ப கலந்தாய்வு என்ற பெயரில் நடைபெறு வருகிறது. அதன் காரணமாக பண பலன் வழங்கப்படுவது இல்லை. தற்போது விருப்ப கலந்தாய்வு இல்லை கட்டாய இடமாறுதல் கலந்தாய்வு அப்படி பட்ட நிலையில் இடமாறுதல் படி வழங்காமல் கட்டாய கலந்தாய்வு நடத்துவது மிக பெரிய துரோகம். இது மட்டும் இல்லாமல் இந்த கலந்தாய்வு மிக பெரிய அளவில் பணம் புரளும் சூழலை உருவாக்கும். மாவட்டம் கல்வி அலுவலர்கள் இந்த வகை கலந்தாய்வில் 110 பேர் பலன் அடைந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் மொத்த கல்வி அலுவலர்கள் எண்ணிக்கை 160 மேல் இருக்கும். ஆனால் 110 எனில் மீதமுள்ள 50 பேர் ஏன் கலந்தாய்வு நடத்தவில்லை... என்ன ஆனது... அவர்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடத்தப்படுமா...? வெளிச்சம் அவர்களுக்கு தான்...

    ReplyDelete
    Replies
    1. இடமாறுதலின் போது வழங்கப்படும் ஈட்டிய விடுப்பை தான் பணமாக்கி கொள்கிறீர்களே .. குறைந்தபட்சம் 5 நாட்கள் என்றால்கூட 6000 வரை பணப்பலன் தானே.. எத்தனை பேர் அந்த பணியேற்பிடைக்காலத்தை அனுபவிக்கிறீர்கள் .. கணக்கில் சேர்த்து பணப்பலனை தானே அடைகிறீர்கள்.. இதற்கு மேலும் பணப்பலன் வேண்டுமா?

      Delete
  30. Ithuku mattum katthutha antha palli...

    ReplyDelete
  31. https://strawpoll.vote/polls/qtyjcicw/vote

    ReplyDelete
  32. Entha dog um , retairement age again 58 ah reduce panna solli ketkala. Summa zero counseling nu Oru topic vachi message pottute time waste pannitu. Vendum, vendum zero counseling vendum nu sonnalum, neenga rail mariyal seithalum, rail mariyal seithu rail verum pothu thandavalathil thalai vaithu sethalum, zero counseling varathu. So , retairement age kuraika solli poradinal use fulla irukum.

    ReplyDelete
  33. Excellent idea. Educational institutions will, develop without any politics

    ReplyDelete
  34. Do /Teachers think about the welfare of students when government tries to implement something beneficial to students community..

    ReplyDelete
  35. உள்ளூர்லயே இருந்துகிட்டு ஒரே ஸ்கூல் ல வருடக்கணக்காக உக்காந்துகிட்டு சிலர் பண்ற அரசியல் உச்சகட்டம்.. பல அரசு பள்ளிகளை சீரழித்து கொண்டிருப்பதே இந்த சிலர் தான்.. புதுசா வரும் ஆசிரியர்களை இவர்கள் நடத்தும் விதம் கேவலம்.. இவனுங்களும் ஒரு வேலையும் செய்யமாட்டாங்க.. வேல செய்யறவங்களையும் விடமாட்டாங்க.. இவங்கள அடையாளம் காண்பது ரொம்ப எளிது.. நீங்க வேணா பாருங்க... தீபாவளிக்கு 4 நாள் லீவு கேப்பாங்க

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி