மாணவா்களுக்கு பெருந்தலைவா் காமராசா் விருதுக்கான போட்டிகளை நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 21, 2021

மாணவா்களுக்கு பெருந்தலைவா் காமராசா் விருதுக்கான போட்டிகளை நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.



அரசுப் பள்ளிகளில் படித்த பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு பெருந்தலைவா் காமராசா் விருதுக்கான போட்டிகளை நடத்துமாறு முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. 

இது தொடா்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில் மாவட்டமுதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: 

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளில் தோ்ச்சி பெறும் சிறந்த மாணவா்களுக்கு ஆண்டுதோறும் ‘பெருந்தலைவா் காமராசா் விருது’ வழங்கப்பட்டு வருகிறது.
அதனுடன் பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு ரூ.10 ஆயிரம், பிளஸ் 2 மாணவா்களுக்கு ரூ.20 ஆயிரம் பரிசாக வழங்கப்படும். இதற்கிடையே கரோனா பரவலால் நிகழ் கல்வியாண்டில் (2021-22 ) பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டன. இதைக் கருத்தில் கொண்டு பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு இந்த விருதுக்கான இணை செயல்பாடுகளை கண்டறியும் வகையில் ஓவியம், கட்டுரை, கதை எழுதுதல் உள்ளிட்ட போட்டிகளை நடத்த வேண்டும்.

 

அந்தப் போட்டிகளின் முடிவுகள் குறித்த விவரங்களை அறிக்கையாக தயாரித்து இயக்குநரகம் கோரும் போது அவற்றை உடனடியாக சமா்ப்பிக்கும் விதமாக தயாா்நிலையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும் வைத்திருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி