மத்திய, மாநில அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அஞ்சல் துறையின் புதிய சேவை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 6, 2021

மத்திய, மாநில அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அஞ்சல் துறையின் புதிய சேவை!

 

ஓய்வூதியர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று மின்னணு உயிர்வாழ் சான்றிதழ் அளிக்கும் சேவையை அஞ்சல் துறை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் வயது முதிர்ந்த ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என்று அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.


உயிர்வாழ் சான்றிதழ்


தமிழகத்தில் ஓய்வூதியதாரர்கள் அந்தந்த மாவட்ட ஓய்வூதியம் வழங்கும் அதிகாரிகளிடம் மாதந்தோறும் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். கடந்த 2020ம் ஆண்டு பரவிய கொரோனா முதல் அலையின் போது ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி உயிர் வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. கொரோனா தொற்று அதிகம் பாதிக்க கூடிய வயதினராக ஓய்வூதியதாரர்கள் இருப்பதால் அவர்களுக்கு தொற்று மிக எளிதாக பரவ வாய்ப்பு அதிகரிக்கும் என்பதால் கால அவகாசம் வழங்கப்பட்டது. அரசின் சேவை மையங்கள், வங்கிகள் ஆகியவற்றின் மூலம் மின்னணு உயிர்வாழ் சான்றிதழ் வழங்கப்படுகிறது.


நேரில் சென்று சான்றிதழ் பெறுவதில் ஓய்வூதியதார்ர்கள் தொடர்ந்து சிக்கலை எதிர்கொள்கிறார்கள். மேலும் வயதானவர்கள் தொற்று பரவும் காலத்தில் வெளியில் சென்று வருவதால் அச்சத்திலும் உள்ளனர். இந்த நிலையில் ஓய்வூதியர்களின் வீடுகளுக்கே சென்று மின்னணு உயிர்வாழ் சான்றிதழ் அளிக்கும் சேவையை அஞ்சல் துறை தொடங்கி உள்ளது. அஞ்சல் ஊழியர்கள், கிராமப்புற அஞ்சல் சேவகர்கள் மூலம் குறைந்த கட்டணத்துடன் ஓய்வூதியர்களின் வீடுகளுக்கே சென்று உயிர்வாழ் சான்றிதழ் வழங்கப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி