மாணவிகளை ஆசிரியைகளாக மாற்றும் தன்னெழுச்சி பயிற்சி: மதுரை பள்ளியில் முதன்முதலாக அறிமுகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 8, 2021

மாணவிகளை ஆசிரியைகளாக மாற்றும் தன்னெழுச்சி பயிற்சி: மதுரை பள்ளியில் முதன்முதலாக அறிமுகம்

மாணவிகளே தன்னெழுச்சியாக கற்பித்தல் பயிற்சிபெற்று, ஆசிரியைகளுக்கு இணை யாகப் பாடமெடுக்கும் திட்டம், மதுரை புதூர் லூர்தன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வகுப்பறையில் பாடமெடுக்கும் ஆசிரியர்கள் போல மாணவர்களே பிற மாணவர்களுக்கு பாடமெடுக்கும் முன்மாதிரி பயிற்சித் திட்டம் ஜூனியர் ஐஏஎஸ் அகாடமி, புதூர் லூர்தன்னை பள்ளி நிர்வாகம் ஆகியவை இணைந்து கரோனா காலத்தில் 3 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாணவிகள் 12 பேர் கொண்ட குழுவுக்கு இணையம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.


ஜூனியர் ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் அகஸ்திய பாரதி வழிகாட்டுதலுடன், பள்ளித் தலைமை ஆசிரியர் எஸ்.சகாயமேரி மேற்பார்வையில் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆசிரியர்களை போன்று பாடக் குறிப்பு எடுத்தல், ஒரு பொருளின் அனைத்து தகவல்களையும் திரட்டுதல், அதற்கான உதாரணங்களை மாதிரி படமாக காட்டி விளக்குதல் என ஆசிரியர்களே வியக்கும் வகையில் இம்மாணவியர் பாடம் எடுக்கின்றனர். இவர்கள் மூலம் மதுரையிலுள்ள அரசு, தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இவர்களை அப்பள்ளி ஆசிரியை சேவியர் செல்வி ஒருங்கிணைத்து செயல்படுகிறார்.

இதுகுறித்து அகஸ்திய பாரதி கூறுகையில், இப்பயிற்சியால் சக மாணவர்கள் பயன் அடைகின்றனர். தேவைப்படும் பள்ளிகளுக்கும் இப் பயிற்சியை அளிக்கத் தயாராக உள்ளோம் என்றார்.

1 comment:

  1. Ithu veraiyaaa.... Already tet pass panna teachers ke innum government job kuduthu lesson edukka sollala... Ithula ithellam thevaiyaaa...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி