பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் படிப்புகளுக்கு : விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நாளை கடைசி : - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 9, 2021

பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் படிப்புகளுக்கு : விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நாளை கடைசி :

 தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம், பிபிடி உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த 19 வகையான துணை பட்டப்படிப்புகள் உள்ளன. இப்படிப்புகளுக்கான 2021-22-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு நேற்று மாலை5 மணியுடன் நிறைவடைந்த நிலையில், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தகுந்த ஆவணங்களுடன் செயலாளர், தேர்வுக் குழு, எண்.162, ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை 600010 என்ற முகவரியில் நவ.10-ம் தேதி (நாளை) மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

“மழையால் போனபைட் சான்றிதழைப் பெற முடியாத மாணவ, மாணவிகள், மாணவர் சேர்க்கை கலந்தாய்வின்போது, ‘போனபைட்’ சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்’’ என்று மருத்துவக்கல்வி இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி