PLUS 1 - துணைத்தேர்வு விடைத்தாள் நகல், மறுகூட்டல்: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 12, 2021

PLUS 1 - துணைத்தேர்வு விடைத்தாள் நகல், மறுகூட்டல்: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.

 

பிளஸ் 1 துணைத்தேர்வு விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் சேதுராமவர்மா இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


''மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத்தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கான விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு 11.11.2021 மற்றும்

12.11.2021 (வெள்ளிக் கிழமை) ஆகிய இரண்டு நாட்களில் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்திப் பதிவு செய்துகொள்ளுமாறு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.

தற்போது செப்டம்பர் 2021, மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்வுக்கான விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிப்பதற்கு 15.11.2021 (திங்கட் கிழமை) அன்று ஒருநாள் கூடுதலாகக் கால அவகாசம் வழங்கப்படுகிறது''.

இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

முன்னதாகத் தேர்வு முடிவுகள் நவம்பர் 9-ம் தேதி வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி