BC / MBC / DNC வகுப்பைச் சார்ந்த கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான ஆண்டு வருமான வரம்பு உயர்வு!
2021-22ம் ஆண்டு முதல் அரசு , அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்டோர் , மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ 1 மாணவியருக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான பெற்றோரது ஆண்டு வருமான உச்ச வரம்பினை ரூ .2,00,000 / - லிருந்து ரூ .2,50,000 / - ஆக உயர்த்தி அரசால் ஆணையிடப்பட்டுள்ளது . அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிவ / மிபிவ / சீம மாணவ / மாணவியருக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மேலும் 2021-22ம் ஆண்டிற்கான முதுகலை ( எம்.ஏ , எம்.காம் . , எம்.எஸ்.ஸி , எம்.பில் . , பிஎச்.டி . , ) பாலிடெக்னிக் , டிப்ளமோ - மூன்று ஆண்டு பட்டயப்படிப்பு ) தொழிற்படிப்பு ( மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ் . , கால்நடை மருத்துவம் , பல் மருத்துவம் , சித்த மருத்துவம் . , போன்ற மருத்துவ பிரிவுகளுக்கும் , வேளாண்மை பொறியியல் , சட்டம் ) போன்ற படிப்புகளில் பயிலும் பிவ மிபிவ / சீம மாணவ / மாணவியர்கள் புதியது விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ .2,50,000 / -ஆக உயர்த்தி அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அல்லது பிற்படுத்தப்பட்டோர் நல இயக்கக மின்னஞ்சல் முகவரி dir-bcmw@nic.in மற்றும் தொலைப்பேசி எண் 044-29515942 மூலம் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககத்தை அணுகலாம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி