புதுச்சேரியில் பல மாதங்களுக்கு பிறகு, 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் இன்று திறக்கப் படுகின்றன.ஒருநாள் விட்டு மறுநாள் வகுப்புகள் நடக்கும். 1,3,5,7 வகுப்புகள் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் நடக்கும். 2,4,6,8 வகுப்புகள் செவ்வாய், வியாழன், சனி கிழமைகளில் நடக்கும்
.அதனால், பள்ளிகள் அனைத்தும் வாரத்திற்கு ஐந்து நாட்களுக்கு பதிலாக, இனி ஆறு நாட்கள் செயல்படும். ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பள்ளிகள் இனி முழு நேரமாக செயல்படும்.பள்ளிகளில் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், கல்வியமைச்சர் நமச்சிவாயம் நேற்று கவர்னர் மாளிகைக்கு சென்று, கவர்னர் தமிழிசையை சந்தித்து பேசினார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி