2021-2022 வருமானவரி கவனத்தில் கொள்ள வேண்டிய விவரங்கள்: - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 17, 2022

2021-2022 வருமானவரி கவனத்தில் கொள்ள வேண்டிய விவரங்கள்:

1) வருமானவரி புதிய முறை அல்லது பழைய முறை எதுவாக இருந்தாலும் சென்ற ஆண்டு உள்ளது போல் வேறு மாற்றம் ஏதும் இல்லை.


2)வருமானவரி படிவத்தில் கழிக்கப்படும் வீட்டுக்கடன், LIC, PLI, இது போன்ற ரசீதுகள் அனைத்தும் 01.04.2021 முதல் 31.03.2022 க்குள் தேதி இருப்பவை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்.


3)TPF or GPF, Lic, Pli, டியூஷன் கட்டணம் மட்டும், வீட்டுக்கடன் அசல் வருமானவரி விதிகளுக்கு உட்பட்ட இன்னும் பிற சேமிப்புகள்  அனைத்தும் 1,50,000 க்குள் கழிக்க முடியும்.


4) CPS திட்டத்தில் உள்ளவர்கள் கூடுதல் சேமிப்பாக 50,000 Cps என சேர்த்து கழித்து கொள்ள முடியும்.


5) தொழில் வரி பிப்ரவரி 2022 இல் செலுத்தும் போது 1250 க்கு குறைவாக செலுத்தி உள்ளவர்கள். அகவிலை உயர்வு காரணமாக ஜனவரி மாத ஊதியம் மாற்றம் அடைந்து உள்ளது. எனவே அக்டோபர் 2021 முதல் மார்ச் 2022 முடிய உள்ள ஆறுமாத ஊதியத்தை கூட்டி 6 ஆல் வகுத்து சராசரி ஆக வரும் ஒருமாதத் தை கணக்கிட்டு தொழில் வரி செலுத்த வேண்டும்.


6) இரண்டாவது பக்கத்தில் NHIS இல் தனியாக பணம் செலுத்தி உள்ளவர்கள் அதிக பட்சம் 25,000 வரை மட்டும் கழித்து கொள்ள முடியும்.


7)மருத்துவ சிகிச்சை பெற்றவர்கள் அந்தந்த மாவட்ட மருத்துவ உயர் அலுவலரின் உரிய சான்றிதழ் பெற்று சிகிச்சை பெற்றவர்கள் மட்டுமே வருமானவரி விதிகளுக்கு உட்பட்டு (Medical Treatment ) கழிக்க முடியும்.


8)மாற்றுத்திறனாளிக ள் 90% வரை உள்ளவர்கள் 75.000 ரூபாயும் 91% மேல் உள்ளவர்கள் 1,25,000 ரூபாய் கழித்து கொள்ள முடியும். (உரிய சான்றிதழ் இணைக்கப் படவேண்டும் ).


9) கொரோனா நிவாரணம் ஜூன் 2021 இல் அவர்கள் விருப்பதில் எத்தனை நாள் அவரவர்கள் ஊதியத்தில் பிடிக்க பட்டு உள்ளது என்பதை கணக்கிட்டு  கழித்து கொள்ள வேண்டும்.


10) 2021 மார்ச் முதல் 2022 பிப்ரவரி முடிய பெற்ற அனைத்து நிலுவை தொகையையும் வருமானவரி கணக்கில் அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி