தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு 3 கட்ட பயிற்சி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 27, 2022

தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு 3 கட்ட பயிற்சி!

 

தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு 3 கட்ட பயிற்சி. பிப்ரவரி 5, 12 மற்றும் 18 தேதிகளில் பயிற்சி முகாம் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் தகவல் 


3 கட்ட பயிற்சி முகாம், பொதுத்தேர்வு பணிகள் பாதிக்காத வகையில் தேவையான ஆசிரியர்களை விடுவிப்பது குறித்து தேர்வுத்துறை இயக்குநர்கள், இணை இயக்குநர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் ஆலோசனை.


 ஆலோசனை தொடங்கியது


நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவது தொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா, இணை இயக்குநர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் நேரில் ஆலோசனை


சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது


முதலமைச்சருடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளதால், மாநில தேர்தல் ஆணையரின் இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் பங்கேற்கவில்லை.


இன்று மாலை 3 மணிக்கு  தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் காணொலி காட்சி மூலமாக மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருடன் ஆலோசனை நடத்தவுள்ளார்..

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி