675 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 31.05.2024 வரை தொடர் நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 16, 2022

675 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 31.05.2024 வரை தொடர் நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியீடு!

2010-11 ஆம் கல்வியாண்டில் தரமுயர்த்தப்பட்ட 135 மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட 675 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 31.05.2024 வரை தொடர் நீட்டிப்பு வழங்கி அரசாணை  வெளியீடு!




ஆணை : மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் , 125 அரசு / நகராட்சி / மாநகராட்சி / உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்த அனுமதி அளித்தும் , மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும் பள்ளிகள் ஒவ்வொன்றுக்கும் 5 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 625 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ரூ.9300-34800.4800 தரஊதியம் என்ற ஊதிய விகிதத்தில் தற்காலிகமாக நிரப்பப்படும் நாள் முதல் ஒரு வருட காலத்திற்கு தோற்றுவித்தும் ஆணைகள் வெளியிடப்பட்டன . மேலும் , ஐந்தாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் , 10 அரசு / நகராட்சி / மாநகராட்சி / உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்த அனுமதி அளித்தும் , மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும் பள்ளிகள் ஒவ்வொன்றுக்கும் 5 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 50 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ரூ.9300-34800.4800 தரஊதியம் என்ற ஊதிய விகிதத்தில் தற்காலிகமாக நிரப்பப்படும் நாள் முதல் ஒரு வருட காலத்திற்கு தோற்றுவித்தும் ஆணைகள் வெளியிடப்பட்டன.

5 comments:

  1. அப்படியென்றால் TRB result தல்லிபோக அதிக வாய்ப்பு உள்ளது.... இந்த சம்பவம் குறித்து TRB எழுதியவர்கல் கவலைஅடைவார்கள்.....

    ReplyDelete
  2. வேலை கிடைக்காமல் வயது வரம்பு முடிவடைந்து நிற்கும் ஆசியர்கள் நிலை?

    ReplyDelete
  3. Replies
    1. Look at the future generations. After having many degrees in education get, trb has blocked now this announcement is it needed??? Why are you suppressing the young ones life

      Delete
  4. Employee will be affected mentally. Age of the person goes up, not down wards

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி