இல்லம் தேடி கல்வி - மாவட்ட மற்றும் வட்டார அளவில் குழு அமைத்தல், பணிகளை வரையறை செய்தல், மாதாந்திர சந்திப்புகள் நடத்துதல் மற்றும் மையம் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வுக்காக தன்னார்வலர்கள் அணுக வேண்டியவர்கள் - மாநில திட்ட இயக்குநரின் கடிதம். ( நாள் : 28.02.2022)
கரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக 1 முதல் 8 வகுப்புகள் வரை பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை ஈடுசெய்வதற்காகத் தன்னார்வலர்களைக் கொண்டு தினசரி 1 முதல் 11/2 மணிநேரம் ( மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் ) குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொண்டு மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் இல்லம் தேடிக் கல்வி " எனும் திட்டம் செயல்பட்டு வருகிறது.
தற்போது 167188 இல்லம் தேடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன . இல்லம் தேடிக் கல்வி மையங்களை விரிவாக்கம் செய்வதற்கும் மற்றும் பலப்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் 25.01.2022 அன்று நடைப்பெற்றது . இவ்வாலோசனைக் கூட்டத்தில் மாவட்ட குழு மற்றும் வட்டார குழு அமைப்பின் பணிகளை வரையற செய்ய கீழ்கண்ட அறிவுரைகள் வழங்கப்படுகிறது
ITK - SPD Proceedings - District & Block level committee.pdf
Aaga training first next education
ReplyDeleteகல்விச்செய்தி கண்ட கண்ட ஜட்டி,பனியனை எல்லாம் விளம்பரம் செய்கிறீர்கள் ...DPI வளாகத்தில் இரண்டு நாட்களாக உண்ணாவிருதம் இருக்கும் TET ஆசிரியர்களை பற்றி ஒரு வரி கூட போடவில்லையே..ஏன்? அதில் வருமானம் ஏதும் இல்லையோ?? தனியார் கோச்சிங் சென்டர் காரன் கோவப்படுவார்கள் என்றா?? கொஞ்சம் நடு நிலையாக இருங்கள் சார்..
ReplyDeleteTransfer counselling yeppo
ReplyDeleteDEE மாவட்ட கலந்தாய்வு நடத்துவதில் என்னதான் பிரச்சனை
ReplyDeleteDPI போராட்டம் பத்தி ஏன் news போடல? கல்வி செய்தி நடுநிலையோடு செயல் பட வேண்டாமா?
ReplyDelete