உயர் கல்வி ஆலோசனைக்கு அரசு பள்ளிகளில் தனி மையம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 1, 2022

உயர் கல்வி ஆலோசனைக்கு அரசு பள்ளிகளில் தனி மையம்

 மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டுதல் வழங்கும் வகையில், ஒவ்வொரு அரசு பள்ளியிலும், ஆலோசனை மையம் அமைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.


அரசு பள்ளி மாணவர்களுக்கு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்த பின், உயர் கல்வி படிப்பது குறித்தும், எந்தெந்த படிப்புக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது குறித்தும் வழிகாட்ட, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது.இதற்காக, ஒவ்வொரு அரசு பள்ளியிலும் உயர் கல்வி ஆலோசனை மையம் அமைக்க, உத்தரவிடப்பட்டு உள்ளது. 


இம்மையத்தில், ஒன்று முதல் நான்கு முதுநிலை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஆலோசனை அளிக்க உள்ளனர். இதற்கிடையில், உயர் கல்வி, வேலைவாய்ப்பு ஆலோசனை தொடர்பாக, அரசு பள்ளிகளின் முதுநிலை ஆசிரியர்களுக்கு பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளன. மாவட்ட வாரியாக, நேற்று துவங்கியுள்ள பயிற்சியில், முதுநிலை ஆசிரியர், முதுநிலை விரிவுரையாளர், ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் என, மூன்று பேர் பங்கேற்கின்றனர்.


இந்த பயிற்சியை முடிப்பவர்கள், அரசு பள்ளி முதுநிலை ஆசிரியர்களுக்கு, வரும், 4ம் தேதி முதல், 9ம் தேதி வரை பயிற்சி அளிக்க உள்ளனர். பயிற்சி பெறும் முதுநிலை ஆசிரியர்கள், பொது தேர்வுக்கு முன்னும், பின்னும், அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வி ஆலோசனைகளை வழங்க உள்ளதாக, பள்ளி கல்வித் துறை தெரிவித்துள்ளது.

1 comment:

  1. அரசு பள்ளிகளில், புதியதாகத் துவங்க உள்ள "உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு ஆலோசனை மையத்தில்" தகுந்த ஆலோசனைகள் வழங்கிட தகுதி பெற்ற புதிய பணியாளர்களை/கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆலோசகர்கள் பணி நியமனம் செய்திட வேண்டும். இது வன்றி, ஏற்கெனவே, பணிப்பளு அதிகமாக உள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களை பயிற்சி அளித்து நியமித்து, பெயரளவில் ஆலோசனை அளித்திடும் முயற்சியை, உடன் அரசு கைவிட வேண்டும். இஃது, மிக மிக இன்றியமையாதது.
    கவிஞர்
    ஜெ. இராமநாதன்
    நியூ ஹவுஸிங் போர்டு
    சிவகாசி(மேற்கு)

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி