TNPSC - தமிழ்வழி சான்றிதழ் பெறுவதில் சிக்கல்; குரூப் - 4 தேர்வர்கள் அதிருப்தி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 7, 2022

TNPSC - தமிழ்வழி சான்றிதழ் பெறுவதில் சிக்கல்; குரூப் - 4 தேர்வர்கள் அதிருப்தி!

 'குரூப் - 4' பதவியில், அரசு பணி தேர்வுகளுக்கான தமிழ்வழி சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், பள்ளிகளில் சிறப்பு முகாம் நடத்தி சான்றிதழ் வழங்க வேண்டும் என, தேர்வர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழக அரசு துறைகளில், பல்வேறு பதவிகளில் காலியிடங்களை நிரப்ப 'குரூப் - 4' தேர்வு, ஜூலை 24ல் நடக்கிறது. இந்த தேர்வுக்கு வரும் 28ம் தேதிக்குள் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். இந்த தேர்வில், 10ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்திருந்தால், அதற்கான 20 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும்.

இந்த ஒதுக்கீட்டை பெற, லட்சக்கணக்கானோர் தாங்கள் படித்த பள்ளிகளில், தமிழ் வழி சான்றிதழ் பெற முயற்சித்து வருகின்றனர். தேர்வர்களின் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு சான்றிதழ் அடிப்படையில், பள்ளிகளில் எளிதில் சான்றிதழ் வழங்கப்படுகின்றன. ஆனால், ஒன்று முதல் 5, 8ம் வகுப்பு வரை படித்த பள்ளிகளில், தமிழ் வழி சான்றிதழ் வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தேர்வர்களிடம் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கான மாற்று சான்றிதழ் இல்லை. மாற்று சான்றிதழ் வைத்திருந்தவர்கள், அதை உயர்நிலைப் பள்ளிகளில் சேரும்போது கொடுத்து விட்டனர். தற்போது, அதன் நகலோ; வேறு தொடர்பு ஆவணங்களோ இல்லாமல் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

இதனால், அரசு மற்றும் தனியார் தொடக்க, நடுநிலை பள்ளிகளில், தமிழ் வழி சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிக்கலுக்கு தீர்வு காண, தமிழ் வழி சான்றிதழ் வழங்கும் நடைமுறையை பள்ளி கல்வித்துறை எளிதாக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


பள்ளிகளில் உள்ள மாணவர்களின் பழைய ஆவணங்கள், பதிவேடுகள் அடிப்படையிலோ அல்லது பள்ளி அடையாள ஆவணத்தின் நகல் அடிப்படையிலோ, உரிய ஆய்வுகள் செய்து, தமிழ் வழி சான்றிதழ் வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

2 comments:

  1. தமிழ் வழி படித்தமைக்கான சான்று பெற பள்ளிகளில் உள்ள பதிவேடே போதுமானது.

    ReplyDelete
  2. Exam applay செய்யும் போதே certificate upload செய்யனுமா???

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி