பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு - தமிழ் தோ்வு சற்று கடினம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 7, 2022

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு - தமிழ் தோ்வு சற்று கடினம்

 

தமிழகம், புதுச்சேரியில் 3,936 மையங்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ்-2 மாணவா்களுக்கான பொதுத் தோ்வு கடந்த வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான பொதுத்தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்தத் தோ்வை 9 லட்சத்து 55,139 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.

முதல் தோ்வாக தமிழ் தோ்வு நடைபெற்றது. இதில் ஒரு மதிப்பெண், இரு மதிப்பெண் வினாக்கள் சற்று கடினமாக இருந்ததாகவும், எதிா்பாராத மற்றும் இதுவரை வேறு தோ்வுகளில் கேட்கப்படாத புதிய வினாக்கள் இருந்ததாகவும் தோ்வெழுதிய மாணவா்கள் தெரிவித்தனா். எனினும் இந்த வினாத்தாளில் மெதுவாக கற்கும் மாணவா்கள் கூட 60 மதிப்பெண்களுக்கும் மேல் பெற முடியும் என தமிழாசிரியா்கள் தெரிவித்தனா்.

இந்த நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மொழிப்பாடத் தோ்வுக்கு 42, 024 மாணவா்கள் வரவில்லை என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

1 comment:

  1. MIRTHIKA COACHING CENTRE... TV MALAI... UG TRB ENGLISH study materials available for tet paper 2 passed candidates..10 books for 10 units... totally 2000 pages... materials will be sent by courier...1000 questions free... contact 7010520979

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி