பழைய பென்ஷன் திட்டம் வலியுறுத்தி லட்சம் பேர் கோட்டை நோக்கி பேரணி அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 9, 2022

பழைய பென்ஷன் திட்டம் வலியுறுத்தி லட்சம் பேர் கோட்டை நோக்கி பேரணி அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. இதில் , தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க மாநில பொதுச்செயலாளர் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது : தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் நடை முறைப்படுத்துவது சாத்தியமில்லை என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.


 இது அரசு ஊழியர்களுக்கு கோபம் , வேதனையை ஏற்படுத்தியுள்ளது. நிதி அமைச்சரின் அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தியும் , திமுக தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும் வரும் மே 9ம் தேதி , தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் தமிழக அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் ஜூன் 3 வது வாரத்தில் தமிழகத் தின் 7 முனைகளிலிருந்து வாகன பிரசாரம் செய்யப்படும். தொடர்ந்து , ஜூலை 2 ம் தேதி கோரிக்கை முழக்க கருத்தரங்கங்கள் மாவட்ட தலை நகரங்களில் நடத்தப்ப டும். ஜூலை 3 வது வாரத்தில் மாவட்ட தலைநகரங்களில் தர்ண நடத்தப்படும். ஆகஸ்ட் 3 வது வாரத்தில் லட்சம் பேர் பங்கேற்கும் கோட்டையை நோக்கி பேரணி நடத்தப்படும் என கூறினார். நடப்பு சட்டசபை தொடரில் , திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்கு றுதியின்படி பழைய பென்ஷன் திட்டம் உட்பட நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு கூறினார்.

2 comments:

  1. கருப்பு ஆடு சங்கங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமா ???

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி