முடிந்தது விடைத்தாள் திருத்தும் பணி: முன்கூட்டியே பிளஸ் 1 ‛ரிசல்ட்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 22, 2022

முடிந்தது விடைத்தாள் திருத்தும் பணி: முன்கூட்டியே பிளஸ் 1 ‛ரிசல்ட்?

 

பிளஸ் 1 விடைத்தாள் திருத்த பணிகள் முடிந்துள்ள நிலையில், ஏற்கனவே திட்டமிட்ட தேதிக்கு, ஒரு வாரம் முன்பே, தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.


பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. பிளஸ் 1 பொது தேர்வுக்கான விடைத்தாள் திருத்த பணிகளும் முழுமையாக நிறைவு பெற்றுள்ளன. மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விபரங்கள், பள்ளிகள் மற்றும் மாவட்ட வாரியாக தயார் செய்யப்பட்டுள்ளன.தேர்வு முடிவை, அடுத்த மாதம், 7ம் தேதி வெளியிட, பள்ளிக் கல்வி துறை திட்டமிட்டிருந்தது.

ஆனால், விடை திருத்தம் மற்றும் மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு பணிகள் முடிந்துள்ளதால், பிளஸ் 1 தேர்வு முடிவை, திட்டமிட்ட தேதிக்கு ஒரு வாரம் முன்பே வெளியிடலாம் என, அரசு தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி