அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் சேர இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 22, 2022

அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் சேர இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்.

 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கு, இன்று முதல் விண்ணப்ப பதிவு துவங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழக உயர்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு: 

தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், இளநிலை பட்டப் படிப்பில் முதலாம் ஆண்டு சேர்வதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று துவங்கும். ஜூலை 7 வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.

விண்ணப்பிக்க விரும்புவோர், www.tngasa.in, www.tngasa.org ஆகிய இணையதளங்கள் வழியே, விண்ணப்ப பதிவு செய்ய வேண்டும். கல்லுாரிகளின் விபரங்கள் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. விண்ணப்பம் மற்றும் பதிவு கட்டணமாக, தேர்வு செய்யும் ஒவ்வொரு கல்லுாரிக்கும், 50 ரூபாய் செலுத்த வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி