Breaking News: 13,000 ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்ப உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 24, 2022

Breaking News: 13,000 ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்ப உத்தரவு!




தமிழக பள்ளிகளில் காலியாக உள்ள அனைத்து வகை ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தற்காலிக ஆசிரியர்கள்:

13,000 ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த ஊதியம் அடிப்படையில் பள்ளி மேலாண்மை குழு மூலம் நியமனம் செய்ய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


7500 ரூபாய் முதல் 12,000 ரூபாய் வரை சம்பளம் வழங்கவும் நடவடிக்கை.

ஜூலை 1ஆம் தேதி முதல் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய மாவட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு.

இது ஆசிரியர் பணியை எதிர்நோக்கி காத்திருக்கும் தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Appointment Procedure - Download here


தற்போது ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி , நடுநிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள 4989 இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 5154 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை பதவி உயர்வு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணிநாடுநர்களை தேர்வு செய்து நிரப்பப்படும் வரை ஜீலை 2022 முதல் ஏப்ரல் 2023 முடிய 10 மாதங்களுக்கும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள 3188 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை ஜீலை -2022 முதல் பிப்ரவரி -2023 முடிய மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாக பள்ளி மேலாண்மை குழுவின் வாயிலாக அந்தந்த ஊர்களில் பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அருகாமையில் உள்ள பகுதியில் உள்ள தகுதியுள்ள நபர்களை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் , உயர் / மேல்நிலைப் பிரிவிற்கான உதவித் தலைமையாசிரியர் மற்றும் மூத்த பட்டதாரி / முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட குழு மூலமாக தற்காலிகமாக நிரப்பிக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. அவ்வாறு தேர்வு செய்யும்போது இது முற்றிலும் தற்காலிகமானது என்பதை நியமனம் செய்யப்படும் நபர்களுக்கு தெரிவிக்கப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இவ்வாறு தற்காலிகமாக பள்ளி மேலாண்மை குழுவின் வாயிலாக நியமனம் செய்யப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ .7500 / - பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ .10,000 / - முதுகலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ .12,000 மதிப்பூதியம் வழங்கப்படும்.


பள்ளி மேலாண்மை குழு மூலம் நிரப்பப்படும் பணியிடங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தகுதிவாய்ந்த பணிநாடுநர் இடைநிலை ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர் நிலையில் இருப்பின் ஆசிரியர் தகுதித் தேர்வு ( TET ) தேர்ச்சி பெற்றவர்களுக்கும் , அவ்வாறு இல்லையெனில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் பணிபுரியும் தகுதியான தன்னார்வலர்களுக்கும் முன்னுரிமை வழங்கிட வேண்டும். அவ்வாறே முதுகலை ஆசிரியர்கள் நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கும் அவ்வாறு இல்லையெனில் , இல்லம் தேடி கல்வி பணிபுரியும் தகுதிவாய்ந்த தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும்.

38 comments:

  1. நண்பர்களே இந்த பணிக்கு யாரும் செல்லவேண்டாம்.உங்க ளை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. சகோ அதுக்கெல்லாம் போட்டி போட்டுக்கிட்டு போவாய்ங்க.. நாம சொல்லி யாரும் கேட்க மாட்டாய்ங்க.. நம்மிடம் ஒற்றுமை இருந்து இருந்தால் நியமன தேர்வே வந்திருக்காதே!!!!!

      Delete
  2. செங்கோட்டை பரவாயில்லை. தகுதித் தேர்வு எழுதி 9 ஆண்டு காலம் முடிந்து இன்னும் விடியல் இல்லை. இப்போது மீண்டும் தற்காலிக ஆசிரியர் நியமனம்... பின்னர் எதற்காக தகுதித் தேர்வு? கல்வித்துறை மீண்டும் அதே அதிமுக ஆட்சியில் இருந்த நிலையில் இருந்து மாறவில்லை.

    ReplyDelete
  3. விரைவில் ஆசிரியர் பணிநியமனம் என்பது இதானா? ப்ரமாதம்

    ReplyDelete
  4. First temporary appointment next permanent to only who have money

    ReplyDelete
  5. Yarum apply panadhiga life nasama poirum part time teachers life madhiri 10 varusam no use...
    Regular posting podatum illana yarum temporary post poga venam

    ReplyDelete
  6. மாணவர்களின் கற்றல் கற்பித்தல் பணிகள் பாதிக்கப்படாமல் இருக்க தற்காலிகமாக ஆசிரியர்களை, அதுவும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று வந்துள்ளது அரசாணை. அப்படி என்றால், நிரந்தரமான பணி வாய்ப்பினை நாங்கள் கேட்கும் பொழுது மட்டும் உனக்கு தகுதி இல்லை என்று, இதே அரசாங்கம் தான் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற எங்களைப் பார்த்து சொல்கின்றது!!! என்ன ஒரு முரண்பாடு😡😡😡😡
    #Bloody fools

    ReplyDelete
    Replies
    1. அருமையான பதிவு,சரியான கேள்வி

      Delete
    2. மிகச் சரியான கேள்வி. இதற்கு பள்ளிக்கல்வித்துறை என்ன பதில் கூற இருக்கிறது.

      Delete
  7. தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தற்காலிக பணிக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்தல் வாக்குரிறுதி நிறைவேற்றப்பட்டது..

    ReplyDelete
    Replies
    1. அய்யோ அய்யோ என்ன இந்த அரசின் பித்தலாட்டம்.

      Delete
  8. என்னங்கடா பித்தலாட்டம் இது.. விடியல் ஆட்சியின் அடுத்த சிக்சர் போல... திமுக வை நம்பி ஒட்டு போட்ட ஆசிரியர்களும் ஆசிரியர் கனவில் இருந்த பட்டதாரிகளுக்கு சுவற்றில் முட்டி கொள்ளுங்கள்..

    ReplyDelete
  9. 1100 ph panni complaint pannunga... Temporary post venaam nu....

    ReplyDelete
  10. Nalla velakku vachuttaru namma amaicharru

    ReplyDelete
  11. ஆசிரிய நண்பர்களே, தற்காலிக பணியிடத்திற்கு யாரும் விண்ணப்பிக்காமல் இருந்தாலே நமக்கான விடியல் இப்போதே கிடைக்கும். 100 நாட்களில் விடியல் தருகிறேன் என்று சொன்ன தற்போதைய முதல்வர் தன்னுடைய வாக்குறுதி என்னாச்சு?

    ReplyDelete
  12. Tet ஆசிரியர்கள் வாழ்க்கை முடிந்தது.. கடவுளே வயிறு எரிகிறது..

    ReplyDelete
  13. Pg trb epoo da cv varum....

    ReplyDelete
  14. So no posting till next year for tet passed out .

    ReplyDelete
  15. Inga Mattum argument palama iruku but porattam nu sonna yarum varamattanga

    ReplyDelete
  16. இந்த ஆட்சி அடுத்த முறை கண்டிப்பாக வராது........

    ReplyDelete
  17. எல்லா மக்களும் அதிர்ச்சி நிலையில் தான் உள்ளனர்....

    ReplyDelete
  18. எங்களுக்கு ஓட்டுபோடத மக்களுக்கு நன்மை செய்யும் அரசு எங்கள் அரசு என பீத்தி கொள்ளும் முதல்வர் அவர்களே. உங்களுக்கு ஓட்டு போட்ட நாங்கள் மிகவும் மனவேதனையில் உள்ளோம். எங்கள் பாவம் உங்கள் ஆட்சிக்கு முடிவு கட்டும்....

    ReplyDelete
  19. 13000 posting pottachu good news for all teachers

    ReplyDelete
  20. ippudi wait panni panni yenakku 59 vayasu aachu next year na appo na redaired da

    ReplyDelete
  21. Then why pg trb , TN tet , education minister , govt school....
    Give all to private and central govt
    It will be better that every one can understand as it is instead of deceive.

    ReplyDelete
  22. ஏன் இந்த காலிபணியிடங்ஙளை கலந்தாய்வில் காட்டவில்லை?பரவாயில்லை இந்த காலிபணியிடங்களை நிரப்புங்கள்.இளைஞர்களுக்கு வேலை கிடைக்கட்டும்.

    ReplyDelete
  23. கலைஞர் போல் எந்த கொம்பனாலும் ஆட்சி செய்ய முடியாது.. இந்த அரசு வேஸ்ட்.......

    ReplyDelete
  24. ஏன் தற்காலிக அரசு கொண்டு வர கூடாது? தகுதி வாய்ந்த ஆசிரியர் நியமனம்.... ஆனால். ஒப்புக்கு சப்பான்....

    ReplyDelete
  25. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் இனி அரசு வேலை பகல் கனவு படித்தவன் நிலை பரிதாபம்

    ReplyDelete
  26. வழக்கு தொடர வேண்டும் நண்பா.

    ReplyDelete
  27. ஒன்றி யத்தின் தப்பிலே ஒன்னும் இல்ல இப்பாலே சாவி இப்போ திருடன் கைலே தில்லாலங்கடி தில்லலே

    ReplyDelete
  28. சீக்கிரம் விண்ணப்பம் கொடுங்கள் ஐயா. நாங்கள் வேலைக்கு வருகிறோம்.

    ReplyDelete
  29. Oru B.Ed degree ,money for applying tet also waste

    ReplyDelete
  30. அமுதசுரபி பயிற்சி மையம்
    UG TRB தமிழ்
    தர்மபுரி & கிருஷ்ணகிரி
    Daily class (6-8 pm)
    Saturday & Sunday (9-5pm)
    Contact : 9344035171

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி