ஆக.24 முதல் 28 வரை மத்திய பல்கலை. மறு நுழைவுத்தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 8, 2022

ஆக.24 முதல் 28 வரை மத்திய பல்கலை. மறு நுழைவுத்தேர்வு

 மத்திய பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் இளநிலை படிப்பு மாணவர் சேர்க்கைக்கான 2-வது கட்ட நுழைவுத்தேர்வு ஆகஸ்டு 4 முதல் 6 வரை நடைபெற்றது.


தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக பல்வேறு மையங்களில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனால், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆகஸ்டு 12 முதல் 14 வரை மறு நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை (என்டிஏ) முன்பு அறிவித்திருந்தது.


அந்த நாட்களில் அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால் தேர்வர்களின் வேண்டுகோளை ஏற்று தேர்வு நாட்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, மத்திய பல்கலைக்கழக மறு நுழைவுத்தேர்வு ஆகஸ்டு 24 முதல் 28-ம் தேதி வரை நடைபெறும் என்று என்டிஏ உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி