இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு அறிவிப்பு: கருத்துகளை தெரிவிக்க யுஜிசி அழைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 29, 2022

இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு அறிவிப்பு: கருத்துகளை தெரிவிக்க யுஜிசி அழைப்பு

 

இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடுவழங்குவதற்கான வழிகாட்டுதல்கள் குறித்து அனைவரும் கருத்து தெரிவிக்கலாம் என்று யுஜிசி அழைப்பு விடுத்துள்ளது.


கரோனா பரவலுக்குபின் நம்நாட்டில் உயர்கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. 2019-ம் ஆண்டில் 75 ஆயிரமாக இருந்த வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கை 2021-ல் 24,439 ஆக சரிந்துவிட்டது.


வழிகாட்டுதல்கள்


இதையடுத்து இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்கான சேர்க்கையை எளிமையாக்கும் வகையில் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வழிகாட்டுதல்களை உருவாக்கியுள்ளது.


இதுதவிர நம்நாட்டின் உயர்கல்வியை உலகமயமாக்க தேசியகல்விக்கொள்கை - 2020-ம்வலியுறுத்துகிறது. அதன் அடிப்படையிலேயே இந்த வழிகாட்டுதல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதில் நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் இளநிலை, முதுநிலை படிப்புகளில் வெளிநாட்டு மாணவர்களுக்காக 25 சதவீத இடங்களை உருவாக்க அனுமதிக்கப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி