பள்ளிகள் நாளைமீண்டும் திறப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 9, 2022

பள்ளிகள் நாளைமீண்டும் திறப்பு

 

காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, நாளை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.


காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வு, கடந்த மாதம் நடந்தது. அக்., 1 முதல் காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டது.


இந்த விடுமுறை இன்றுடன் முடிகிறது. நாளை, அனைத்து தனியார், அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. அரசு பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, நாளை வகுப்புகள் துவங்க உள்ளன.


ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மட்டும், வரும் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அதேபோல், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளி மாணவர்களுக்கும் காலாண்டு தேர்வு முடிந்து, நாளை வகுப்புகள் துவங்க உள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி