தீபாவளியை முன்னிட்டு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கு 25 ஆம் தேதி செவ்வாய் கிழமை விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, "இவ்வாண்டு தீபாவளி பண்டிகை 24.10.2022 அன்று கொண்டாடும் பொருட்டு சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏதுவாக 25.10.2022 அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்துக்கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 19.11.2022 அன்று பணி நாளாக அனுசரிக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது." என்ரு குறிப்பிடப்பட்டு உள்ளது.
இத ஒரு நாள் விடியறதுக்கு முன்னாடி சொல்லி இருந்தா.. ஒரு நாள் தள்ளி டிக்கெட் புக் பண்ணி இருப்பாய்ங்க 😄😄
ReplyDeleteOthavatha leave pongada
ReplyDelete