MBBS , BDS படிப்புகளுக்கு அக். 11 முதல் கலந்தாய்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 4, 2022

MBBS , BDS படிப்புகளுக்கு அக். 11 முதல் கலந்தாய்வு.

 

நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டு இடங்களுக்கான மருத்துவக் கலந்தாய்வு அக்டோபர் 11-ஆம் தேதி முதல் தொடங்கும் என்று மருத்துவக் கலந்தாய்வு கமிட்டி அறிவித்துள்ளது.


இந்த அறிவிப்பின்படி, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவக் கல்லூரிகளில் அக்டோபர் 11ஆம் தேதி தொடங்கும் முதல்கட்ட மருத்துவக் கலந்தாய்வு அக். 20 வரை நடைபெறும்.


அக்டோபர் 17ஆம் தேதி முதல் 28ஆம் தேதிக்குள் மாநிலங்களில் முதல்கட்ட மருத்துவக் கலந்தாய்வை நடத்திக் கொள்ளலாம்.


மருத்துவக் கலந்தாய்வு மூலம் கல்லூரிகளை தேர்வு செய்தவர்கள், அக்டோபர் 28ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர்க்கைப் பெற்றுவிட வேண்டும். இதுபோல, 


அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான இரண்டாம் கட்ட மருத்துவக் கலந்தாய்வு நவம்பர் 2ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெறும். அதுபோல, மாநிலங்களுக்கான 2அம் கட்ட கலந்தாய்வு நவம்பர் 7ஆம் தேதி 18ஆம் தேதி வரை நடைபெறும்.


இந்த மருத்துவக் கலந்தாய்வுகளில் கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்கள் நவம்பர் 18ஆம் தேதிக்குள்ளும், மாநிலங்களுக்கான கலந்தாய்வில் பங்கேற்றவர்கள் நவம்பர் 21ஆம் தேதிக்குள்ளும் கல்லூரிகளில் சேர்க்கை பெற்றுவிட வேண்டும்.


இதன்பிறகு, காலியாக இருக்கும் மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களுக்கு டிசம்பர் மாதத்தில் கலந்தாய்வு நடைபெறும்.


நாடு முழுவதும் முதலாமாண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு நவம்பர் 15ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. கடந்த 8 ஆண்டுகளாக பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவே இல்லை. ஆனால் பதவி உயர்வு மட்டும் வைத்து நிரப்பி வருகிறது கல்வித்துறை. கடந்த ஆட்சியில் இருந்த அதே நிலை. இருக்கும் இடங்களில் பதவி உயர்வு மற்றும் நேரடி நியமனம் என்று இரண்டிலும் நிரப்பாமல் பதவி உயர்வு மட்டும் கொடுத்து டெட் தேர்ச்சி பெற்ற ஆயிரக்கணக்கான வேலை இல்லாமல் இருப்பவர்களை மேலும் நோகடித்து வருகிறது கல்வித்துறை. இந்த ஆட்சியில் இது மாற்றம் பெறும் என்று வாக்களித்தால் ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப பதவி உயர்வு மற்றும் நேரடி நியமனம் மூலம் நிரப்புகிறது கல்வித்துறை.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி