School Morning Prayer Activities - 12.10.2022 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 12, 2022

School Morning Prayer Activities - 12.10.2022

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 12.10.2022

திருக்குறள் :

பால்: அறத்துப்பால்

அதிகாரம் : வான் சிறப்பு. 

குறள் 12.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

பொருள் :
நல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையே.

பழமொழி :

Never cast the oar till you are out

கரையை அடையும் முன் துடுப்பை எறியாதே.

இரண்டொழுக்க பண்புகள் :

1. நீரின்று அமையாது உலகு எனவே நீரை வீணாக்க மாட்டேன். 

2. உழவு தொழில் இல்லை என்றால் இவ்வுலகு இல்லை. எனவே உழவரையும் உழவுத் தொழிலையும் மதிப்பேன்.

பொன்மொழி :

கொல்லாமை என்னும் நெறி பலவகையான சுகங்களை அளிக்கவல்லது.

பொது அறிவு :

1. இந்தியாவின் முக்கிய உணவுப் பயிர் எது ? 

நெல்

2.இந்தியாவில் எந்த ஆண்டு விமான போக்குவரத்து தொடங்கப்பட்டது ? 

1953 ஆம் ஆண்டு.

English words & meanings :

Catenation - bonding of atoms of the same elements to form a chain. Carbon atoms tend to form catenation. சங்கிலியாக்கம். சங்கிலி இணைப்பு

ஆரோக்ய வாழ்வு :

கேரட் வேர் காய்கறியை சார்ந்ததாகும், அவை எண்டோடாக்சின்கள், பாக்டீரியா மற்றும் ஈஸ்ட்ரோஜனுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் தனித்துவமான இழைகளைக் கொண்டிருக்கின்றன. ஒரு சில நாட்களுக்கு கேரட்டை பச்சையாக சாப்பிட்டால், உயர் எண்டோடாக்சின்கள், உயர் கார்டிசோல் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஆகியவற்றிலிருந்து விலகிச் செல்லலாம். உடலில் உள்ள எண்டோடாக்சின்களை நச்சு நீக்க இது ஒரு சிறந்த வழியாகும்.



நீதிக்கதை

குகையுடன் பேசிய நரி

ஒரு காட்டில் கிரகிரன் என்ற சிங்கம் வாழ்ந்து வந்தது. ஒரு நாள் இரை தேடி காட்டின் பல பகுதிகளிலும் அலைந்து திரிந்தும் அதற்கு ஒரு சிறிய இரைகூடக் கிடைக்கவில்லை. வழியில் ஒரு பெரிய குகையினைக் கண்டது. உடனே, சிங்கத்திற்கு ஒரு யோசனை பேசாமல் நாம் இந்தக் குகைக்குள் ஒளிந்து கொண்டால், இந்த குகையில் இருக்கும் விலங்குகள் இரை தேடிவிட்டுத் திரும்பி மீண்டும் இங்கேதானே வரும். அப்படி வரும் விலங்குகளை பிடித்து உண்டுவிடலாம் என்று நினைத்து அந்தக் குகைக்குள் சென்று படுத்துக் கொண்டது. 

அந்தக் குகையில் அவிபுச்சன் என்கிற ஒரு புத்திசாலியான நரி வசித்து வந்தது. தன் குகைக்குத் திரும்பி வந்து தன் குகைக்குள் நுழைய முனைந்தப்போது குகையின் வாசலில் சிங்கத்தின் காலடித் தடங்கள் இருப்பதனைப் பார்த்து குகைக்குச் சிங்கம் ஒன்று வந்திருக்கிறது என்பதை அறிந்து கொண்டது. ஆனால் நரிக்கு ஒரு சந்தேகம்?. சிங்கம் உள்ளே இருக்கிறதா? அல்லது சென்று விட்டதா? என்பதைத் தெரிந்து கொள்வதற்காக குகைக்கு வெளியே நின்று கொண்ட நரி, ஏய், குகையே! ஏய், குகையே! என்று அழைத்தது. சிங்கம் எழுந்தது. வெளியே ஒரு நரி இருப்பதனை அறிந்து கொண்டது. அது யாரிடம் பேசுகிறது என்று கவனித்தது. 

நரி, மீண்டும், ஏய், குகையே ஏன் மௌனமாக இருக்கிறாய்? என்றது. சிங்கத்திற்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் இந்த நரி குகையிடம் பேசுகிறது? என்று யோசித்தது. நரி, குகையே என் மீது ஏதும் கோபமா? நீ தினமும் என்னிடம் பேசுவாயே? இன்று ஏன் என்னுடன் பேசாமல் அமைதியாக இருக்கிறாய்? என்று கேட்டது. அப்போதுதான் சிங்கத்திற்குப் புரிந்தது. அடடா! இந்தக் குகை தினமும் நரியுடன் பேசக்கூடியது போலும். ஆனால், இன்று ஏனோ இது பேசவில்லை என்று நினைத்தது. நரி, ஏய், குகையே! நீ பேசிய பின்னர்தானே நான் உன்னுள் நுழைவேன். இன்று நீ பேசாமல் இருந்தால் நான் எப்படி உன்னுள் நுழைவேன்? என்றது. 

சிங்கம் பதறிப் போனது. அடடா! குகை பேசினால்தான் நரி குகைக்குள் வருமாமே! நரி குகைக்குள் வராவிட்டால் நமக்கு இரை கிடைக்காதே! என்று நினைத்த சிங்கம் குகைபோலப் பேசினால், அந்த நரி குகைக்குள் வந்துவிடும். நாமும் அதை அடித்துச் சாப்பிட்டு விடலாம்! என்று நினைத்து, ஏ நரியே! நான் வேறு சிந்தனையில் இருந்ததால் உன்னிடம் பேசவில்லை. தவறாக நினைக்காதே. வா உள்ளே! என்று குகை பேசுவது போல பேசி குரல் எழுப்பியது. அவ்வளவுதான், குகைக்குள் இருந்து சிங்கத்தின் குரல் வெளிவந்ததும் சுதாரித்துக் கொண்ட நரி, தப்பித்தோம் பிழைத்தோம் எனத் தலைதெறிக்க ஓடிப் போனது. 

நீதி :
எதனையும் செய்வதற்கு முன்பு ஆலோசித்துச் செய்யவேண்டும்.

இன்றைய செய்திகள் - 12.10.22

* அதிக மழை பெய்தாலும் மின் விநியோகம் பாதிக்காது: அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி.

* வடகிழக்கு பருவமழை காலத்தில் பொருட்கள் சேதமடைவதைத் தவிர்க்க கூட்டுறவுத் துறை சார்பில் ரேஷன் கடைகளுக்கு 17 அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

 * 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்திற்கு புதிதாக 25 ஆரம்ப சுகாதார மையமும், 25 நகர்ப்புற சுகாதார மையமும் அமைக்க அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

* பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை இந்தாண்டு அதிகரித்துள்ளது  என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

* தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* பிரதமர் நரேந்திர மோடியின் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 280 இடங்களில் தேசிய தொழிற்பயிற்சி மேளா நேற்று நடைபெற்றது.

* ஃபிஃபா யு-17 உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய அணிக்கு தலைமை தாங்கும் அஸ்டம் ஓரானின் குடும்பத்திற்கு ஜார்க்கண்ட் அரசு, டிவியும் இன்வெட்டரும் வழங்கி உள்ளது. இதன்மூலம் அந்தக் குடும்பமும் கிராமத்தினரும் முதல் முறையாக தங்கள் வீட்டுப் பெண் ஆடுகளத்தில் விளையாடுவதை பார்க்க இருக்கின்றனர்.

* பூமியில் இருந்து விண்ணில் 7,100 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள கண் கவரும் குமிழ் மூடிய நெபுலா புகைப்படத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா வெளியிட்டுள்ளது.

* ஐ.நா. பொதுச் சபை அவசரக் கூட்டத்தில் ரஷ்யாவை பயங்கரவாத நாடு என்று விமர்சித்து தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது உக்ரைன்.

* தேசிய விளையாட்டு போட்டியில் பதக்கப்பட்டியலில் தமிழகம் 5-வது இடத்தில் உள்ளது.

* 16 அணிகள் பங்கேற்கும் ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் நேற்று தொடங்கியது.

* மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: முதல்முறையாக அரை இறுதிக்கு முன்னேறி அசத்தியது தாய்லாந்து அணி.

Today's Headlines

*  Even if there is heavy rain, the power supply will not be affected: Minister Senthilbalaji assures.

*  17 instructions have been issued to the ration shops on behalf of the Cooperative Department to avoid damage to the products during the Northeast Monsoon season.

  * After 5 years, Tamil Nadu has received permission to set up 25 primary health centers and 25 urban health centers, Minister M. Subramanian said.

 * Higher Education Minister Ponmudi has said that the number of students enrolling in engineering courses has increased this year.

*  Chennai Meteorological Department has informed that 16 districts of Tamil Nadu are likely to receive heavy rain today.

* National Vocational Training Mela was held yesterday at 280 locations across the country under Prime Minister Narendra Modi's Skill India program.

*  The Jharkhand government has provided a TV and inverter to the family of India captain Astam Oran in the FIFA U-17 World Cup football tournament.  With this, the family and the villagers are witnessing their daughter playing on the field for the first time.

 * NASA has released a photo of the eye-catching bubble-covered nebula 7,100 light-years away from Earth.

* UN  In an emergency session of the General Assembly, Ukraine has registered its strong condemnation, criticizing Russia as a terrorist state.

* Tamil Nadu is ranked 5th in the medal list in the national sports competition.

 * The 16-team Junior Women's World Cup started in India yesterday.

* Women's Asia Cup Cricket: The Thailand team made surprising progress to the semi-finals for the first time.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி