டி.என்.பி.எஸ்.சி.,யின் நான்கு வகையான போட்டி தேர்வுகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நடத்தப்பட்ட நான்கு போட்டி தேர்வுகளுக்கு, நேர்முக தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கான தேதியும், தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலும், டி.என்.பி.எஸ்.சி.,யின், www.tnpsc.gov.inஎன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.
*கூட்டுறவு தணிக்கை துறை உதவி இயக்குனர் பதவியில், எட்டு காலியிடங்களுக்கு இந்த ஆண்டு, ஏப்., 30ல் தேர்வு நடத்தப்பட்டது.
தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முக தேர்வு, வரும் 31ம் தேதி நடக்கிறது
* நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் பணியில், 29 காலியிடங்களை நிரப்ப, இந்த ஆண்டு மே மாதம் நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நவ., 11ல் நேர்முக தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது
*தமிழ்நாடு சமூக பாதுகாப்பு பணியில் அடங்கிய, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பணியில், 16 காலியிடங்களை நிரப்ப, இந்த ஆண்டு ஜூனில் நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, வரும் 31ம் தேதி நேர்முக தேர்வு நடக்கிறது
* தமிழக சிறை பணிகளில் அடங்கிய உளவியலாளர் பணியில், நான்கு காலியிடங்களை நிரப்ப, இந்த ஆண்டு ஆகஸ்டில் நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஆன்லைனில் சான்றிதழ் சரிபார்ப்பு முடிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி