10 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களை தேசிய கல்வி சுற்றுலாவிற்கு அழைத்து சென்றுள்ளது சென்னை மாநகராட்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 4, 2022

10 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களை தேசிய கல்வி சுற்றுலாவிற்கு அழைத்து சென்றுள்ளது சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் 10 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களை தேசிய கல்வி சுற்றுலாவிற்கு அழைத்து சென்றுள்ளது சென்னை மாநகராட்சி. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லாத நிலையில் இந்த ஆண்டு மாநகராட்சி பள்ளியில் பயின்று அதிக மதிப்பெண் பெற்ற 50 மாணவ மாணவியர் டெல்லி, சண்டிகர், சிம்லா போன்ற மாநிலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.


கல்வி சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவ மாணவியர் ஆர்வத்துடன் அந்தந்த மாநிலங்களில் இருக்கும் முக்கியமான பகுதிகளை பார்த்து வியந்து வருகின்றனர். மேலும் அந்தந்த மாநிலத்தில் உள்ள மக்களின் நாகரீகம், பண்பாடு குறித்தும் அவர்களுக்கு விளக்கப்படுகிறது. அக்டோபர் 31 ஆம் தேதி தொடங்கிய கல்வி சுற்றுலாவை, மாணவ மாணவியர் இம்மாதம் எட்டாம் தேதி முடித்துக்கொண்டு சென்னை திரும்புகின்றனர். இந்தாண்டு மாணவர்களின் தேசிய கல்விச் சுற்றுலாவிற்காக சென்னை மாநகராட்சி ரூபாய் 9.17 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி