அரசு மேல்நிலைப் பள்ளிகளில், இளநிலை உதவியாளர்கள், மாற்றுப்பணி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள், கல்வி அலுவலகங்கள் போன்றவற்றில், மூன்று ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றிய அலுவலக பணியாளர்கள், அக்டோபரில் கட்டாய இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதனால், பல அரசு மேல்நிலை பள்ளிகளில், இளநிலை உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு பணிகள் உட்பட, பல பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
இது தொடர்பாக, பணியாளர் பிரிவு இணை இயக்குனர் நரேஷ், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
சில அரசு மேல்நிலைப் பள்ளிகளில், உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
இதுபோன்ற பள்ளிகளுக்கு, அருகில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் உதவியாளர் அல்லது இளநிலை உதவியாளர்கள், வாரத்தில் மூன்று நாட்கள் மாற்றுப் பணி பார்க்க வேண்டும்.
அதற்கான ஏற்பாடுகளை, முதன்மை கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி