(Strict restrictions on taking Medical Leave for Government Employees)...
மருத்துவச் சான்று இனி ஒரே சமயத்தில் 5 நாட்களுக்கு மட்டுமே பெற முடியும். ஐந்து நாட்களுக்கு மேலும் பெற வேண்டுமெனில் பிளட் டெஸ்ட், இசிஜி, எக்ஸ்ரே போன்ற டெஸ்ட் முடிவுகளின் அடிப்படையில் மட்டுமே வழங்க வேண்டும். ஐந்து நாட்களுக்கு மேல் ஐந்து மடங்குகளில் விடுப்பு நாட்கள் வழங்கும்பொழுது மேற்கண்ட இணைப்புகள் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.
மேலும் விடுப்பு சான்றிதழ் வழங்கும் மருத்துவர் தனது நோயாளியின் விவரங்களை பதிவேடு எண்ணின் வரிசை எண் மற்றும் உள்நோயாளி எனில் உள்நோயாளி பதிவேடு வரிசை எண் வரிசை ஆகியவற்றை குறிப்பிட்டு வழங்க வேண்டும். மேலும் மருத்துவச் சான்றின் ஒரு நகலை அவர் எப்பொழுதும் பராமரிக்க வேண்டும்.
அந்நகல் ஐந்து ஆண்டுகளுக்கு தேவைப்படும் பொழுது ஆய்வுக்கு உட்படுத்தும் வகையில் மருத்துவ சான்றினை ஐந்து ஆண்டுகள் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். இனி மருத்துவ விடுப்பு எடுப்பதற்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது.
ஒரு அரசுப்பள்ளி ஆசிரியையாக இதை நான் வரவேற்கிறேன்.....
ReplyDeleteமாதம் ஒரு லட்சம் ஊதியம் பெறும் ஆசிரியர்கள்....கொஞ்சமாவது மனசாட்சியோடு நடந்து கொள்வது தர்மம்.......
அப்டியா dog
Deleteஅதற்கும் மேல்
Deleteகணவர்: எனக்கு உடல்நிலை சரியில்லை
ReplyDeleteமனைவி: எனக்கு மருத்துவ விடுப்பு கொடுக்க மாட்டார்கள்
டாக்டர்: உங்கள் கணவரை சரியாக கவனிக்காததால் அவர் காலமாகிவிட்டார்.
அரசாங்கம்:DA அறிவிப்பு
மனைவி:???????
சரியான கருத்து
Deleteஇது அரசாணை கிடையாது மருத்துவ கவுன்சில் வெளியிட்டுள்ள அறிவிப்பு மட்டுமே. அரசாங்கம் தனியாக அரசாணையோ அல்லது அந்தந்த துறை சார்ந்த மூத்த அலுவலர் கடிதம் வெளியிட்டால் மட்டுமே இத்தகைய நடைமுறை பொருந்தும் அதுவரை பழைய விதிமுறைகளை பொருந்தும் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்
ReplyDeleteதமிழ்நாடு அரசு இதற்கு இன்னும் அரசாணை வெளியிடவில்லையே
ReplyDelete