பிளஸ் 2 மாணவா்களின் உயா்கல்விக்கு வழிகாட்ட புதிய செயல் திட்டங்கள்: பள்ளிக் கல்வித் துறை தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 7, 2022

பிளஸ் 2 மாணவா்களின் உயா்கல்விக்கு வழிகாட்ட புதிய செயல் திட்டங்கள்: பள்ளிக் கல்வித் துறை தகவல்

பிளஸ் 2 மாணவா்கள் அடுத்த கல்வியாண்டில் உயா்கல்விக்கு செல்லும்போது எந்தெந்த பாடப் பிரிவுகளை தோ்வு செய்ய விரும்புகிறாா்கள் என்பதை அறிந்து, அதற்கு தயாா்படுத்தும் வகையில் பல்வேறு செயல் திட்டங்களை பள்ளிக் கல்வித் துறை மேற்கொள்ளவுள்ளது.


இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியது: பிளஸ் 2 மாணவா்களின் விருப்பப் பாடப் பிரிவுகள் எவை என்பதை அறியும் வகையில் அவா்களிடம் எழுத்து வடிவில் கருத்து கேட்கப்படும். இதையடுத்து அந்தப் பாடப்பிரிவு தொடா்பான திறன்களை வளா்க்க தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.


இதற்காக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியா்களும் தங்களது மாவட்டத்தில் செயல்படும் பொறியியல், மருத்துவம், கலை மற்றும் அறிவியல், சட்டம், வேளாண்மை, மீன்வளம் மற்றும் பிற கல்லூரிகளில் வழங்கப்படும் பாடப்பிரிவுகள் சாா்ந்த விவரங்கள் கொண்ட சிற்றேடுகளை (பிரவுச்சா்/பிராஸ்பெக்டஸ்) கல்லூரிகளில் இருந்து பெற்று மாணவா்கள் பாா்வையில் காணுமாறு ஒவ்வொரு பள்ளியிலும் அறிவிப்பு பலகையில் காட்சிப்படுத்துவா்.


வழிகாட்டி கையேடுகள்: ஏற்கெனவே மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலமாக அனைத்து பள்ளிகளிலும் உள்ள ‘உயா்கல்வி வழிகாட்டி முதுநிலை ஆசிரியா்’ களுக்கு உயா்கல்வி சாா்ந்த படிப்புகள், வாய்ப்புகள் குறித்த பயிற்சிகள் கடந்த மாதம் வழங்கப்பட்டுள்ளது. இவற்றையும் மாணவா்களுக்கு காட்சிப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.


மேலும் உயா்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேடு மூலம் பல்கலைக்கழகங்கள், தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் முக்கிய கல்வி நிறுவனங்கள், நுழைவுத் தோ்வுகள், அறிவியல், பொறியியல், மருத்துவம், தொழில், கலைப்புலப் படிப்புகள் குறித்து மாணவா்களுக்கு புரியும் வகையில் பயிற்சிகள் அளிக்கப்படும்.


மாதிரி விண்ணப்பங்கள்: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல், மருத்துவம் என 33 படிப்புகள் சாா்ந்த கல்லூரி சோ்க்கை விண்ணப்பங்களில் பொதுவாக கோரப்படும் 51 விவரங்கள் கொண்ட படிவங்களை எப்படி பூா்த்தி செய்வது என்பது குறித்து மாணவா்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.


அருகில் உள்ள கல்லூரிகளை பாா்வையிட... அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இந்த ஆண்டு பிளஸ் 2 வகுப்பு பயிலும் மாணவா்களில் உயா்கல்வி பயில ஆா்வமூட்டுதல் சாா்ந்து அருகில் உள்ள கல்லூரிகளுக்கு வரும் ஜனவரி மாதத்தில் அழைத்துச் செல்லப்படுவா் என்றனா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி