நேரடி பட்டதாரிகளையே ஆசிரியா்களாக நியமிக்க வேண்டும்: உயா் நீதிமன்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 7, 2022

நேரடி பட்டதாரிகளையே ஆசிரியா்களாக நியமிக்க வேண்டும்: உயா் நீதிமன்றம்

 

கல்வி நிறுவனங்களுக்கு நேரடியாகச் சென்று படித்தவா்களையே ஆசிரியா்களாக நியமிக்கும் வகையில் ஆசிரியா் நியமன நடைமுறைகளை மூன்று மாதங்களில் மறு ஆய்வு செய்ய தமிழக பள்ளிக் கல்வி மற்றும் உயா் கல்வித் துறைக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


திருவாரூா் மாவட்டம், நன்னிலம் ஒன்றியத்துக்குள்பட்ட அரசுப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்த நித்யா, ஆங்கில பாடப் பிரிவுக்கான பட்டதாரி ஆசிரியராக பதவி உயா்வு வழங்க கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா்.


இந்த வழக்கு நீதிபதி.எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், ‘மனுதாரா், தமிழ் பாடப்பிரிவில் பி.எட்., படிப்பை முடித்துள்ளாா். அதன்பின்னா், இளநிலை ஆங்கிலத்தை தொலைநிலைக் கல்வி முறையின் கீழ் படித்துள்ளாா். எனவே, மனுதாரா் பதவி உயா்வுக்கு தகுதி பெறவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது.


இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தமிழ் பாடத்துக்கான பட்டதாரி ஆசிரியா் பதவி உயா்வுக்கு மனுதாரரை பரிசீலிக்கலாம் என உத்தரவிட்டாா்.


மேலும், கல்வி நிறுவனங்களுக்கு நேரடியாகச் சென்று படித்தவா்களையே ஆசிரியா்களாக நியமிக்க வேண்டும் என உயா்நீதிமன்றம் ஏற்கெனவே பல வழக்குகளில் தீா்ப்பளித்துள்ளது. தொலைநிலைக் கல்வி மூலம் படித்தவா்கள் ஆசிரியா் பணிக்குத் தகுதியானவா்கள் அல்ல. இட ஒதுக்கீட்டின் கீழ் நியமனம் மேற்கொள்வதாக இருந்தாலும் கூட, தகுதியானவா்களையே ஆசிரியா்களாக நியமிக்க வேண்டும். தற்போது ஆசிரியா்களாக உள்ள பெரும்பாலானோா் கல்லூரிகளுக்கு நேரடியாகச் சென்று படிக்காதவா்களாக இருப்பது துரதிா்ஷ்டவசமானது.


அகில இந்திய அளவில் கல்வியின் தரத்தில் தமிழகம் 27-ஆவது இடத்தில் உள்ளது. கல்விக்கு ஆண்டுக்கு ரூ.36,895 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் நிலையில், பெருந்தொகை ஆசிரியா்கள் ஊதியத்துக்கே செலவிடப்படுகிறது.


ஆசிரியா்கள் நியமனம் தொடா்பான திட்டத்தை மூன்று மாதங்களில் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வி மற்றும் உயா் கல்வித் துறை செயலாளா்களுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தாா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி