அரையாண்டு தேர்வு விடைத்தாள் திருத்த அவசரம் ஆசிரியர்கள் அதிருப்தி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 17, 2022

அரையாண்டு தேர்வு விடைத்தாள் திருத்த அவசரம் ஆசிரியர்கள் அதிருப்தி

 

அரையாண்டு தேர்வு விடைத்தாள்களை உடனே திருத்தி வழங்க வேண்டும் என்ற கல்வித்துறை கமிஷனரின் உத்தரவுக்கு ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.


அனைத்து பள்ளிகளிலும் டிச. 16 முதல் அரையாண்டு தேர்வு துவங்கியுள்ளது. குறிப்பாக அரசு பொதுத்தேர்வை சந்திக்க உள்ள பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு அத்தேர்வு போன்றே அரையாண்டு தேர்வை நடத்த வேண்டும். இதற்கான விடைத்தாள்களை உடனுக்குடன் ஆசிரியர்கள் மதிப்பீடு செய்து, தேர்ச்சி விபரங்களை டிச., 24 க்குள் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலரிடம் வழங்குமாறு கல்வித்துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.


இந்த உத்தரவு ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாடு உயர், மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொது செயலாளர் எஸ்.சேதுசெல்வம் கூறியதாவது:


அரையாண்டு தேர்வு டிச., 16 ல் தொடங்கி 23 ல் தான் முடிகிறது. மொழி பாட ஆசிரியர்கள் இக்கால கட்டத்திற்குள் திருத்தி விடலாம். டிச., 23 ல் நடக்கும் பாட விடைத்தாளை எப்படி ஆசிரியர்கள் ஒரே நாளில் திருத்தி வழங்க முடியும். மேலும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை வருவதால் ஆசிரியர்கள் விழாக்களை கொண்டாடுவதில் சிரமம் ஏற்படும். எனவே விடைத்தாள் திருத்த கால அவகாசம் வழங்க வேண்டும், என்றார்

2 comments:

  1. மூலை வளர்ச்சி இல்லாதவர்கள்?

    ReplyDelete
  2. மூலை அல்ல மூளை

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி