அரசுப்பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கலை திருவிழா போட்டி, இன்று தொடங்கி 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு கலையரசன், கலையரசி விருதுகளை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குவார் ்என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து பள்ளி கல்வித்துறையின் மாநில திட்ட இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை, ‘‘தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கான கலை திருவிழா போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் 2022- 23ம் ஆண்டிற்கான மாநில அளவிலான கலை திருவிழா போட்டிகள் இன்று தொடங்கி 30ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதில் வெற்றி பெறும் பரிசு வழங்கும் விழாவானது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 12ம் தேதி அன்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. வெற்று பெறும் மாணவ மாணவிகளுக்கு கலையரசன், கலையரசி விருதுகள், பரிசுகள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது. மாநில அளவிலான இந்த போட்டிகள் வகுப்பு வாரியாக 5 மாவட்டங்களில் நடைபெற உள்ளது. அதன்படி,
6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மதுரையிலும், 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கோயம்புத்தூரிலும், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருவள்ளூரில் நுண்கலை, நாடகம் மற்றும் மொழித்திறன் போட்டிகள், காஞ்சிபுரத்தில் இசை வாய்ப்பாட்டு, கருவி இசை, இசை சங்கமம் உள்ளிட்ட போட்டிகள், செங்கல்பட்டு மாவட்டத்தில் நடன போட்டிகள் ஆகியவை நடைபெற உள்ளன. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 5 லட்ச ரூபாய் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி