அரசு கல்லுாரி காலிப்பணியிடங்களை பதவி உயர்வில் நிரப்ப தீர்மானம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 9, 2023

அரசு கல்லுாரி காலிப்பணியிடங்களை பதவி உயர்வில் நிரப்ப தீர்மானம்

 

அரசு கலைக் கல்லுாரி உதவிப் பேராசிரியர் காலிப்பணியிடங்களில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தகுதியுள்ள ஆசிரியர்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும்,' என மதுரையில் தமிழ்நாடு நெட்/செட்/பிஎச்.டி., ஆசிரியர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது.


இச்சங்க மண்டல குழுக் கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணவேணி (மதுரை), காளிதாஸ் (ராமநாதபுரம்) தலைமையில் நடந்தது. விருதுநகர் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.


மாநில பொதுச் செயலாளர் ரமேஷ், இணை செயலாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர்.


மாநில தலைவர் ஜவஹர் பேசுகையில், ''தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் 1970 களில் வழங்கப்பட்டது


போல் 50 சதவீதம் பணியிடங்களை அனைத்து வகை அரசு, உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் நெட்/செட்/பி.எச்.டி., முடித்த ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கி பணிமாறுதல் வழங்க வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடவுள்ள போட்டித் தேர்வு அறிவிப்பில் இத்தகுதியுடைய ஆசிரியர்களுக்கு 50 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் மார்ச் முதல் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம் என்றார். இதுதொடர்பாக தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. மகளிரணி செயலாளர் ஜோதிமுத்து நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி