மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 7, 2023

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு?

 


மத்திய அரசு, ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, அகவிலைப்படியை, 4 சதவீதம் உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


விலைவாசி உயர்வை ஈடு செய்ய, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி, ஆண்டுக்கு இரண்டு முறை திருத்தப்பட்டு, உயர்த்தி வழங்கப்படுகிறது. தற்போது, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ௩௮ சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படுகிறது. கடந்த முறை திருத்தமானது, செப்டம்பர் ௨௮ல் மேற்கொள்ளப்பட்டு, ஜூலை ௧ முதல் அமல்படுத்தப்பட்டது.


இது குறித்து அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பு பொதுச் செயலர் சிவகோபால் மிஷ்ரா கூறியதாவது:


தொழிற்சாலை பணியாளர்களுக்கான நுகர்வோர் விலை குறியீடு, ௨௦௨௩, ஜன., ௩௧ல் வெளியிடப்பட்டது. இதனடிப்படையில், ௪.௨௩ சதவீதம் அகவிலைப்படி அதிகரிக்க வேண்டும். எனவே, அகவிலைப்படி உயர்வானது நான்கு சதவீதமாக இருக்கும். அதாவது, நடப்பு ௩௮ சதவீதத்தில் இருந்து ௪௨ சதவீதமாக உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. இந்த உயர்வு, ஜன., ௧ முதல் அமல்படுத்தப்படுவதாகத் தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்

1 comment:

  1. வருடம் இரண்டு முறை மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டும் தான் குடுக்கப்படுகிறது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி