‘க்யூட்’ நுழைவுத் தேர்வு: தமிழக மாணவர்கள் விண்ணப்பிப்பதில் சிக்கல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 15, 2023

‘க்யூட்’ நுழைவுத் தேர்வு: தமிழக மாணவர்கள் விண்ணப்பிப்பதில் சிக்கல்

க்யூட் நுழைவுத் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் விண்ணப்பிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.


மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு க்யூட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு 10-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் தேவை என்பதால் தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


கரோனா காலத்தில் 2021-ஆம் ஆண்டு பொதுத்தேர்வின்றி மாணவர்கள் தேர்ச்சி செய்யப்பட்டதால், தமிழக மாணவர்களால் தற்போது மதிப்பெண்கள் குறிப்பிட முடியவில்லை.


மார்ச் 12ஆம் தேதி வரை இணையத்தில் விண்ணப்பிக்க காலஅவகாசம் உள்ள நிலையில், தமிழக அரசு தலையிட்டு விலக்கு பெற்று தர மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


ஏற்கெனவே ஜேஇஇ தேர்வுக்கும் இதே சிக்கல் எழுந்த நிலையில் தமிழக மாணவர்களுக்கு அதிலிருந்து விலக்கு தரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி