பள்ளி மாணவர்களின் விவரங்களை திருடி விற்பனை செய்தது குறித்து அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மாவட்ட கல்வி அலுவலர் புண்ணியகோடி காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி, அரசு உதவி பெரும் பள்ளிகளில் படிக்க கூடிய மாணவர்களின் முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை பள்ளிக்கல்வித்துறை சேகரித்து வைத்துள்ளது. இந்த விபரங்களை தனியார் கல்லூரிகள், தனியார் நிறுவனங்களுக்கு பள்ளி கல்வித்துறையில் இருக்க கூடிய நபர்கள் விற்பனை செய்ததாக தகவல் வெளியானது.
இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை சார்பாக சமூக வலைதளத்தில் ஆடியோ பதிவானது வெளியானது. அதன் அடிப்படியில் காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில், காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இருந்து நுங்கம்பாக்கம் காவல்நிலையத்துக்கு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிராம் போலீசார் விசாரணை மேற்கொள்ள காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி