"காலை உணவு திட்டம்’’ தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் அமல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 1, 2023

"காலை உணவு திட்டம்’’ தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் அமல்

 

முதல்வரின் ‘‘காலை உணவு திட்டம்’’ தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்தது. இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் பயிலும் 1 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயன்பெறுவார்கள்.தமிழகத்தில் அரசு பள்ளியில் பயிலும் 1 முதல் 5 வகுப்பு வரையிலான மாணவ - மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி அளிக்கும் வகையில் ‘‘முதல்வரின் காலை உணவு திட்டத்தை’’, தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்தாண்டு ஜூலை மாதம் 27ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. இத்திட்டத்திற்கு பலர் வரவேற்பையும், பாராட்டையும் தெரிவித்தனர்.

இதன் காரணமாக சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2023-24ம் நிதியாண்டில் இருந்து ‘‘முதல்வரின் காலை உணவுத்திட்டம்’’ விரிவாக்கம் செய்யப்படுவதாக அறிவித்தார். அதன்படி, நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 433 நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் 56,098 மாணவ - மாணவியர் பயன்பெறும் வகையில் முதல்வரின் ‘‘காலை உணவு திட்டம்’’ விரிவாக்கத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி