School Morning Prayer Activities - 17.03.2023 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 17, 2023

School Morning Prayer Activities - 17.03.2023

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 17.03.2023

திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: பொறை உடைமை

குறள் எண்: 158
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்
தகுதியான் வென்று விடல்.

பொருள்:
ஆணவங் கொண்டு அநீதி விளைவிப்பவர்களை, நாம் நம் பொறுமைக் குணத்தால் வென்று விடலாம்


பழமொழி :
Do not count your chickens before they are hatched

கைக்கு வராததைக் கணக்குப் பார்க்காதே.


இரண்டொழுக்க பண்புகள் :

1. கண் எனது உடம்புக்கும் மனதிற்கும் வெளிச்சம். 

2. எனவே என் கண் தெளிவானவைகளையும் சரியானவைகளையும் பார்க்க முயற்சிப்பேன்


பொன்மொழி :

பதிலை கண்டறிவதை நோக்கி, முன்னோக்கி நகர்வதில் உங்கள் ஆற்றலை செலவிடுங்கள்.


பொது அறிவு :

1. அடர்த்தி குறைவான கோள் எது? 

 சனி . 

 2. ஈராக்கின் பழைய பெயர் என்ன? 

 மெசபடோமியா


ஆரோக்ய வாழ்வு :

கொலஸ்ட்ரால் குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள், மாதவிடாய் பிரச்சனை இருக்கும் பெண்களும் காலையில் கொத்தமல்லி நீரை பருகலாம். அவர்களுக்கு இந்தப் பிரச்சசனையில் இருந்து விடுபடு வழி கிடைக்கும். மேலும், கொத்தமல்லி நீர் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது.


கணினி யுகம்

Ctrl+Tab : Switch between open tabs in browsers or other tabbed ... Ctrl+End : Its use is to move the cursor to the last of the document.  


மார்ச் 17 இன்று

சாய்னா நேவால் 


சாய்னா நேவால் (Saina Nehwal, பிறப்பு: 17 மார்ச் 1990) ஓர் இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை. இறகுப்பந்தாட்ட உலகப் பேரவையின் நடப்பு உலகத் தரவரிசையில் முதலாவதாக உள்ளார்,[3][4] உலக இளநிலை இறகுப்பந்தாட்ட வாகையர் போட்டியில் வென்ற முதல் இந்தியப் பெண்ணும், ஒலிம்பிக் இறகுப்பந்தாட்டப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியரும் இவரே.[5] 2012 ஆகத்து மாதத்தில் நடந்த லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இவர் வெண்கலப் பதக்கம் பெற்றார்.[6] பிரகாஷ் பதுகோனேக்குப் பின்னர் உலகத் தர வரிசையில் முதலிடம் பெற்ற முதல் இந்தியரும், உலகத் தர வரிசையில் முதன் முதலாக முதலிடம் இந்தியப் பெண்ணும் இவரே. சூன் 21, 2009ஆம் நாள் ஜாகர்தாவில் நடந்த இந்தோனேசிய ஓப்பன் போட்டியில் தரவரிசையில் முன்னிற்கும் சீனாவின் லின் வாங்கை அதிரடியாக வென்று பட்டத்தைப் பெற்று வரலாறு படைத்தார். இந்த போட்டியை வென்ற முதல் இந்தியப் பெண் இவர்.
நீதிக்கதை

புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா?

ஒரு சமயம் அரபுநாட்டு அரசர் கிருஷ்ணதேவராயருக்கு ஒரு அதிசய ரோஜா செடி ஒன்றை பரிசாக அளித்தார். அதை மன்னர் தனது தோட்டத்தில் நட்டு வைத்தார். சிறிது காலத்திற்கு பிறகு அந்த செடியில் இருந்து ரோஜா மலர்கள் மலர்ந்தன. அங்கு வந்த தெனாலிராமனின் மகன் அதை பறித்து தனது தாய்க்கு பரிசாக கொடுக்க நினைத்து பூக்களை பறிக்க தொடங்கினான். பூக்களைப் பறித்துக்கொண்டு இருக்கும்போது அரண்மனைக் காவலர்கள் பார்த்துவிட்டனர்.

அரண்மனைக் காவலர்கள் தெனாலிராமனின் மகனை அரசர் கிருஷ்ணதேவராயரிடம் காண்பிக்க அழைத்துச் சென்றனர். செல்லும் வழியில் தெனாலிராமன் காவலர்களை பார்த்து என் மகனை எங்கே அழைத்துக்கொண்டு செல்கிறிர்கள்? என்று கேட்டான். அவர்களோ! உங்கள் மகன் ரோஜா பூக்களை திருடியபோது அவனை நாங்கள் பிடித்துவிட்டோம். இப்போது அவனை மன்னரின் பார்வைக்காக அழைத்துச் செல்கிறோம். வேண்டுமென்றால் அவன் கைகளில் உள்ள திருடிய ரோஜா பூக்களை பார் என்று அவன் கைகளை காண்பிக்கச் செய்தனர்.

தெனாலிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இருந்தாலும் தன் மகனை காப்பாற்ற விரும்பிய தெனாலி சிறுது நேரம் யோசித்து தான் அணிந்திருந்த மேலாடையை கழற்றி மகன் மேல் போர்த்திவிட்டான். இன்று வெயில் அதிகமாக உள்ளது. இந்த துணி என் மகனை காப்பாற்றும் என்று கூறிவிட்டுச் சென்றார். புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா? தெனாலி மகன் தந்தை கூறியதை யோசிக்க தொடங்கினான். உடனே ஒவ்வொரு பூக்களாக சாப்பிட ஆரம்பித்தான். துண்டு முடி இருப்பதனால் அவன் பூக்களை சாப்பிடுவதை காவலர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அரண்மனைக் காவலர்கள் தெனாலிராமனின் மகனை அரசர் கிருஷ்ணதேவராயர் முன்னால் அழைத்துச்சென்றனர். 

காவலர்கள் மன்னரை பார்த்து, அரசே! தெனாலிராமனின் மகன் பூக்களை திருடியபோது அவனை நாங்கள் பிடித்துவிட்டோம். இந்த குற்றத்திற்கு நீங்கள் தண்டனை வழங்க வேண்டும், என்று கூறினர். மன்னரும் எல்லாவற்றையும் கேட்டறிந்து, பின்னர் அரசர் காவலர்களை பார்த்து, திருடிய பூக்கள் எங்கே? என்று கேட்டார். காவலர்கள் மன்னரை பார்த்து, பூக்கள் அனைத்தும் அவன் கைகளில் தான் அரசே உள்ளது என்று காவலர்கள் கூறினர்.

அரசர் தெனாலி மகனை பார்த்து, உன் கைகளை காட்டு என்று கூறினார். அவனும் வெறும் கைகளை காண்பித்தான். அவன் கைகளில் எதுவும் இல்லை. மன்னர் தெனாலி மகனை பார்த்து, நீ பறித்த பூக்கள் எங்கே? என்று கேட்டார். அவனோ! மன்னரைப் பார்த்து, நான் பூக்கள் எதுவும் பறிக்கவில்லை. என் தந்தைக்கு அவமானம் ஏற்படுத்தவே இந்த இரண்டு காவலர்களும் இப்படி செய்தார்கள்! என்று கூறினான். மன்னரும் அந்த இரண்டு காவலர்களையும் திட்டி அனுப்பிவிட்டார். தெனாலியும் அவன் மகனும் எப்படியோ தப்பித்தோம் என்று சிரித்துக்கொண்டே வீட்டிற்கு புறப்பட்டனர்.


இன்றைய செய்திகள் - 17.03. 2023

🌸பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தும் திட்டம் இல்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.


🌸சென்னை ராணி மேரி கல்லூரியில் "பப்ளிக் போலீஸ்" என்ற தன்னார்வ அமைப்பின் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்தனர்.


🌸பொதுத் தேர்வில் 49000 மாணவ, மாணவிகள் ஆங்கில தேர்விற்கு ஆப்சென்ட் : அதிர்ச்சியான பள்ளிக்கல்வித்துறை!


🌸புதிய கோவிட் வைரஸ்.‌ இஸ்ரேல் அடையாளம் தெரியாத இரண்டு புது வைரஸ்களை கண்டு பிடித்துள்ளது.


🌸சேப்பாக்கத்தில் கலைஞர் கருணாநிதி ஸ்டாண்ட்.. ஒரே மேடையில் ஸ்டாலின், தோனி, உதயநிதி.. நாளை திறப்பு!


🌸தென் ஆப்ரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவு அணிகள் ஒரு பந்து கூட போடாத நிலையில் மழை காரணமாக போட்டி ரத்தானதால் விரக்தியில் உள்ளனர்


Today's Headlines


 🌸Minister Anbil Mahesh has said that there is no plan to conduct a special examination for students who have not written the 12th standard general examination.


🌸A seminar on "Public Police", a voluntary organization, was held at Queen Mary College, Chennai.  School Education Minister Anbil Mahesh and retired Justice Balakrishnan inaugurated the seminar.


🌸49000 students are absent for the English subject in the general exam : School education department was shocked.


🌸 New covid variant: Israel discovers two unidentified viruses.


🌸Kalaignar Karunanidhi Stand in Chepakkam.. Stalin, Dhoni and Udhayanidhi join together and opens tomorrow.


🌸South Africa and West Indies were frustrated because of the ODI was abandoned without a ball being bowled by the rain.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி