கல்லுாரிகள், கோடை விடுமுறைக்கு பின், ஜூன், 19ல் திறக்கப்படும் - உயர் கல்வித்துறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 22, 2023

கல்லுாரிகள், கோடை விடுமுறைக்கு பின், ஜூன், 19ல் திறக்கப்படும் - உயர் கல்வித்துறை

தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், கோடை விடுமுறைக்கு பின், ஜூன், 19ல் திறக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், பொதுத்தேர்வு மற்றும் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடந்து வருகின்றன.


வரும் 29ம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1ல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.


இந்நிலையில், கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், கோடை விடுமுறைக்கு பின், ஜூன், 19ல் திறக்கப்படும் என, கல்லுாரி கல்வி இயக்குனர் கீதா அறிவித்துள்ளார்.


மேலும், கல்லுாரி மாணவர்களுக்கான 'செமஸ்டர்' தேர்வுகளை, கல்லுாரி முதல்வர்களே முடிவு செய்து, கோடை விடுமுறையை அறிவித்துக் கொள்ளவும், அவர் உத்தரவிட்டுள்ளார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி