பிளஸ் 2 ரிசல்ட்- எப்போது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 3, 2023

பிளஸ் 2 ரிசல்ட்- எப்போது?

 

மூன்று வாரங்களாக நடந்து வந்த பிளஸ் 2 பொது தேர்வு இன்றுடன் முடிகிறது.


தேர்வு முடிவை, மே, 2ம் வாரம் வெளியிட தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.


தமிழகத்தில் பிளஸ் 2 பொது தேர்வு, மார்ச், 13ல் துவங்கியது.


பிளஸ் 2 தேர்வில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பள்ளி மாணவர்கள் மற்றும் தனி தேர்வர்கள் என, 8.75 லட்சம் பேர் தேர்வு எழுத அனுமதிக்கப் பட்டனர்.


அவர்களில், சராசரியாக, 50 ஆயிரம் மாணவர்கள் வரை தேர்வுக்கு வராமல், 'ஆப்சென்ட்' ஆகி விட்டனர். இந்த விவகாரம், தமிழக பள்ளிக்கல்வி துறைக்கு, அரசியல் ரீதியாக கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.


இதையடுத்து, வரும் ஜூன் மாத தேர்வு அல்லது அக்டோபரில் மீண்டும் துணை தேர்வு நடத்தி, இடைநிற்றல் ஆனவர்களை, தேர்வு எழுத வைக்க, பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது.


இந்நிலையில், பிளஸ் 2 பொது தேர்வு இன்றுடன் முடிகிறது. இன்று, வேதியியல், கணக்கு பதிவியல் மற்றும் புவியியல் பாடங்களுக்கு தேர்வு நடக்கிறது.


தேர்வுகள் இன்று முடிவதால், ஒரு வாரத்தில் விடைத்தாள் திருத்தம் துவங்க உள்ளது.


அதன்பின், மே மாதம், இரண்டாம் வாரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட, பள்ளிக்கல்வியின் அரசு தேர்வுத்துறை திட்டமிட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி