10,11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடுவது தொடர்பான தேர்வுத்துறையின் செய்தி அறிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 18, 2023

10,11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடுவது தொடர்பான தேர்வுத்துறையின் செய்தி அறிக்கை!

மார்ச் / ஏப்ரல் 2023 - ல் நடைபெற்ற 2022-2023 - ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்தபடி 19.05.2023 ( வெள்ளிக்கிழமை ) காலை 10.00 மணிக்கும் , மேல்நிலை முதலாமாண்டு  பொதுத்தேர்வு முடிவுகள் 19.05.2023 ( வெள்ளிக்கிழமை ) பிற்பகல் 200 மணிக்கும் வெளியாகும். 

தேர்வு முடிவுகள் இயக்குநரகத்திலேயே வெளியிடப்படுவதால் செய்தியாளர் சந்திப்பு ஏதுமில்லை என்ற விவரமும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

 செய்தியாளர்கள் பகுப்பாய்வு அறிக்கையினை https://dge.tn.nic.in என்ற இணையதளத்தில் நாளை ( 19.05.2023 ) காலை 10.00 மணிக்கு பத்தாம் வகுப்பிற்கும் பிற்பகல் 2.00 மணிக்கு மேல்நிலை முதலாமாண்டிற்கும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் மேலும் அவர்களது மின்னஞ்சல் முகவரிக்கும் பகுப்பாய்வு அறிக்கை அனுப்பி வைக்கப்படும்.




No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி